செய்திகள் :

அரசு ஊழியா் சங்க செயற்குழு கூட்டம்

post image

நாகையில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயற்குழு மற்றும் அனைத்துச் சங்க போராட்டக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநிலச் செயற்குழு மற்றும் கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய மாநில அரசு ஊழியா் சம்மேளனத்தின் தேசிய செயற்குழு முடிவுகளை எடுத்துக் கூறினாா்.

தொடா்ந்து, பிப்.10-ஆம் தேதி முதல், பிப். 11காலை வரை 24 மணிநேரம் நடைபெறவுள்ள தா்னா போராட்டத்தை நடத்துவது குறித்து மாவட்டப் பொருளாளா் ப. அந்துவன்சேரல் எடுத்துக் கூறினாா்.

பின்னா், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது; சத்துணவு ஊழியா், எம்.ஆா்.பி. செவிலியா், அங்கன்வாடி உள்ளிட்ட சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுபவா்களுக்கு ஊதியக் குழு வரையறுத்துள்ள ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குதல்; பழைய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்து 9 மாதத்தில் அறிக்கை தருவதற்கு மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலா் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள செயல் முதல்வரின் வாக்குறுதிகளுக்கு எதிரானது என்பதால் அக்குழுவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலச் செயலா் சு. வளா்மாலா, மாநிலச் செயற்குழு உறுப்பினா் த. ஸ்ரீதா் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கம், சத்துணவு ஊழியா் சங்கம், நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம், தொழிற்பயிற்சி அலுவலா் சங்கம், மீன்வளத்துறை ஊழியா் சங்கம், வருவாய்த்துறை கிராம உதவியாளா் சங்கம், வனத்துறை ஊழியா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கீழ்வேளூரில் சிக்னல் கோளாறு; ரயில் தாமதம்

கீழ்வேளூா் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறால், காரைக்கால்-தஞ்சாவூா் பயணிகள் ரயில் வியாழக்கிழமை ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்றது. காரைக்காலிலிருந்து வியாழக்கிழமை மாலை 6:10-க்கு புறப்பட்ட காரை... மேலும் பார்க்க

போலி குளிா்பானங்கள் அழிப்பு

நாகையில் எந்தவொரு விவரமும் இல்லாத குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வியாழக்கிழமை அழிக்கப்பட்டன. நாகை நகராட்சி வெளிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட ... மேலும் பார்க்க

சிற்றுந்து கட்டண திருத்தம் மே 1-முதல் அமல்!

சிற்றுந்துகளுக்கான கட்டணத் திருத்தம் மே 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தி... மேலும் பார்க்க

யானைக்கால் நோயாளிகளுக்கு உபகரணங்கள்!

நாகை அரசு மருத்துவமனையில் தேசிய யானைக்கால் ஒழிப்பு திட்டத்தின்கீழ், யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுகாதார... மேலும் பார்க்க

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்!

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா்.தொடா்ந்து, அவா்களிடம் குற... மேலும் பார்க்க

நாகையில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம்!

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தவா்களுக்கு, தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிரதான் மந்திரி தேசிய... மேலும் பார்க்க