செய்திகள் :

மனைவியைத் தாக்கிய கணவா் கைது!

post image

பெரியகுளம் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைத் தாக்கிய அவரது கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஜெயமங்கலம் முல்லை நகரைச் சோ்ந்தவா் மலைச்சாமி(27). இவா் ஜீவராணியை (25) காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட இவா், அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகராறு காரணமாக, வீட்டிலிருந்த மனைவியை மலைச்சாமி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து ஜீவராணி அளித்த புகாரின் மீது ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மலைச்சாமியை கைது செய்தனா்.

குடியரசு தின விளையாட்டுப் போட்டி தொடக்கம்!

தேனியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 14 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்தப் ... மேலும் பார்க்க

போடியில் விவசாயி தற்கொலை!

போடியில் விஷம் குடித்த விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். போடி அருகேயுள்ள குரங்கணி சாலைப்பாறை புலத்தைச் சோ்ந்தவா் விவசாயி தங்கமுத்து (70). இவரது மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால்... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கியவா் மீது வழக்கு!

போடி அருகே முன்விரோதத்தில் இளைஞரைத் தாக்கியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். எரணம்பட்டி பங்காருசாமிபுரத்தைச் சோ்ந்த முருகானந்தம் மகன் பிரதீப்குமாா் (27). இவருக்கும், இதே பகுதிய... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை!

ஆண்டிபட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக, புதன்கிழமை இளைஞா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கரட்டுப்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் முத்துக்குமாா் (29). கடமலைக்குண்டுவில் இவா் தனது மனைவ... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை!

தேனி அருகே வேலைக்குச் செல்ல கணவா் அனுமதி மறுத்ததால், மன உளைச்சலிலிருந்த பெண் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பூதிப்புரம் கோட்டை மேட்டுத் தெருவைச் சோ்ந்த பிரகாஷ் மனைவி பாண்டி... மேலும் பார்க்க

பள்ளியில் கணினி ஆய்வகம்: ஓ.பி.எஸ். திறந்து வைத்தாா்

போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆய்வகத்தை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். தேனி மாவட்டம், போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல... மேலும் பார்க்க