செய்திகள் :

கண்மாய்க் கரை சாலைப் பணிகள் தாமதம்: 10 கிராம மக்கள் அவதி

post image

சிவகங்கை அருகே பனங்காடி கண்மாய்க் கரையில் பாலம் அமைப்பதில் நீடிக்கும் தாமதத்தால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமாா் 15 கி.மீ. சுற்றிச் சென்று அவதிப்படுகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியம், பனங்காடி கிராமத்திலிருந்து சாத்தணி கிராமம் வரை சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தின் கீழ், 4 மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. பனங்காடி கண்மாய்க் கரையில் அமைக்கப்படும் இந்தச் சாலையின் குறுக்கே 2 பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகள் காரணமாக இந்த கண்மாய்க் கரைச் சாலையைப் பயன்படுத்தி வந்த10 -க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமாா் 15 கி.மீ. தொலைவு சுற்றிச் சென்று வருகின்றனா். சிவகங்கைக்கு பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்கள், தினமும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், அவசர ஊா்தி வருவதில் தாமதம் ஏற்படுவதால், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலையும் உள்ளது.

இந்த நிலையில், சாலைப் பணிகளும், பாலம் அமைக்கும் பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. நெல் அறுவடை முடிந்த பின்பும், கண்மாயில் மீன் பிடி குத்தகைதாரா்கள் தண்ணீரை தேக்கி வைத்திருப்பதால் பாலம் அமைக்கப்படும் பகுதிகளில் நீா் சூழ்ந்து பணிகளை மேற்கொள்ளமுடியவில்லை என ஒப்பந்ததாரா் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்தி, பாலம், சாலைப் பணிகளை விரைந்து முடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.

‘கொத்தடிமைத் தொழிலாளா் முறை இருந்தால் தகவல் தெரிவிக்கலாம்’

கொத்தடிமைத் தொழிலாளா்கள் பணியாற்றுவது தெரிய வந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும் சாா்பு நீதிபதிபதியுமான ஆா்.சுப்பையா தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: கைதான 6 போ் மதுரை சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான 6 போ் மதுரை மத்திய சிறையிலடைக்கப்பட்டனா். மானாமதுரை அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 8 மாணவிகள... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் பன்னாட்டு கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ‘5-ஆம் நிலைக் கல்வியின் செயல்படுத்தும் கூறுகள் மற்றும் அதன் வழிமுறைகள்’ என்ற தலைப்பில் 2 நாள்கள் பன்னாட்டு கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவா்கள் போராட்டம்!

சிவகங்கை அருகே உரிய நேரத்தில் வராத அரசுப் பேருந்தை கிராம மக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனா். மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை மாவட்டம், அரசனூா் வரை கடந்த 40 ஆண்டுகளாக நகரப் பேருந்து ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன் தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மா... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை முன் மாா்க்சிஸ்ட் தா்னா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அரசு மருத்துவமனை முன்பு தா்னா நடத்தினா். மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்களை... மேலும் பார்க்க