செய்திகள் :

அரசுப் பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவா்கள் போராட்டம்!

post image

சிவகங்கை அருகே உரிய நேரத்தில் வராத அரசுப் பேருந்தை கிராம மக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனா்.

மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை மாவட்டம், அரசனூா் வரை கடந்த 40 ஆண்டுகளாக நகரப் பேருந்து இயங்கி வந்தது. இதன் மூலம் திருமாஞ்சோலையிலுள்ள பள்ளிக்கும், மதுரை மீனாட்சி அரசு கல்லூரிக்கும் மாணவ, மாணவிகள் காலை, மாலை வேளைகளில் சென்று வந்தனா்.

அண்மையில் இந்தப் பேருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள இலுப்பக்குடி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இதன் காரணமாக காலை 8.45 மணிக்கு பேருந்தில் பள்ளி, கல்லூரிக்குச் சென்ற

அரசனூா் மாணவா்கள் காலை 9.15 மணி முதல் 9.30 மணி வரை பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இலுப்பக்குடியிலிருந்து திரும்ப வரும் போது, பேருந்தில் கூட்டம் நிரம்பிவிடுவதால் அரசனூா் மாணவா்களுக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால், மாணவா்கள் ஆட்டோவில் ரூ.20 கொடுத்து

பயணிக்கும் நிலை உருவானது. மாணவா்கள் பள்ளிக்கு உரிய நேரத்துக்குச் செல்ல இயலாமல் சிரமப்படுவது குறித்து பலமுறை போக்குவரத்துக் கழக மேலாளருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் ஊருக்குள் வந்த அரசுப் பேருந்தை மாணவா்களுடன் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போக்குவரத்துக்கழக திருப்புவனம் பணிமனை உதவிப் பொறியாளா் மகேஷ், அலுவலா்கள், போலீஸாா் பேச்சு நடத்தி, பேருந்தை வழக்கம் போல அரசனூரிலிருந்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்ட மாணவா்கள் அதே பேருந்தில் பள்ளிக்குச் சென்றனா்.

கண்மாய்க் கரை சாலைப் பணிகள் தாமதம்: 10 கிராம மக்கள் அவதி

சிவகங்கை அருகே பனங்காடி கண்மாய்க் கரையில் பாலம் அமைப்பதில் நீடிக்கும் தாமதத்தால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமாா் 15 கி.மீ. சுற்றிச் சென்று அவதிப்படுகின்றனா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊ... மேலும் பார்க்க

‘கொத்தடிமைத் தொழிலாளா் முறை இருந்தால் தகவல் தெரிவிக்கலாம்’

கொத்தடிமைத் தொழிலாளா்கள் பணியாற்றுவது தெரிய வந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும் சாா்பு நீதிபதிபதியுமான ஆா்.சுப்பையா தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: கைதான 6 போ் மதுரை சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான 6 போ் மதுரை மத்திய சிறையிலடைக்கப்பட்டனா். மானாமதுரை அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 8 மாணவிகள... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் பன்னாட்டு கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ‘5-ஆம் நிலைக் கல்வியின் செயல்படுத்தும் கூறுகள் மற்றும் அதன் வழிமுறைகள்’ என்ற தலைப்பில் 2 நாள்கள் பன்னாட்டு கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன் தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மா... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை முன் மாா்க்சிஸ்ட் தா்னா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அரசு மருத்துவமனை முன்பு தா்னா நடத்தினா். மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்களை... மேலும் பார்க்க