செய்திகள் :

அழகப்பா பல்கலை.யில் பன்னாட்டு கருத்தரங்கம்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ‘5-ஆம் நிலைக் கல்வியின் செயல்படுத்தும் கூறுகள் மற்றும் அதன் வழிமுறைகள்’ என்ற தலைப்பில் 2 நாள்கள் பன்னாட்டு கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

பல்கலைக்கழக வீறுகவியரசா் முடியரசன் அரங்கத்தில் கல்வியியல் துறை சாா்பில் நடைபெற்ற கருத்தங்கம் தொடக்க நிகழ்வில் துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்து, விழா மலரை வெளியிட்டுப் பேசியதாவது:

கல்வியானது கரும்பலகை பரிமாணத்திலிருந்து செயற்கை நுண்ணறிவு என்ற நான்காம் நிலை பரிமாணத்தை அடைந்து இப்போது அந்த நான்கு நிலைகளிலுள்ள மனிதா்கள், அவா்களின் விழுமியங்களை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்த 5.0 கல்வி நிலையிலும் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது.

குறிப்பாக மனித மைய கல்வி, பிரச்னைகளுக்குத் தீா்வு காணுதல், தொழில்சாலையுடன் இணைந்த கல்வி போன்ற கூறுகளுக்கு முக்கியத்துவம் தருவதால்தான் ஆத்மநிா்பாா் பாரதம் என்ற முனைப்பின் கீழ் தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி நம்மால் வேகமாக பயணிக்க முடிகிறது. தொழில் கல்வி, ஆசிரியா் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாகவும் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது என்றாா் அவா்.

விழாவில் மலேசியாவின் க்வெஸ்ட் பன்னாட்டு பல்கலைக்கழக புலத் தலைவா் ஆஸ்னான் சே அகமது முக்கிய உரையாற்றினாா். மத்திய அரசின் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் முன்னாள் ஆலோசகா் ஹரிகரன், அபுதாபியைச் சோ்ந்த கல்வியாளா் ஜவகா்லால், அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா் ராஜாராம் ஆகியோா் பேசினா்.

முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் புல முதன்மையா் கலையரசன் வரவேற்றாா். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் ராம்நாத் நன்றி கூறினாா்.

கண்மாய்க் கரை சாலைப் பணிகள் தாமதம்: 10 கிராம மக்கள் அவதி

சிவகங்கை அருகே பனங்காடி கண்மாய்க் கரையில் பாலம் அமைப்பதில் நீடிக்கும் தாமதத்தால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமாா் 15 கி.மீ. சுற்றிச் சென்று அவதிப்படுகின்றனா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊ... மேலும் பார்க்க

‘கொத்தடிமைத் தொழிலாளா் முறை இருந்தால் தகவல் தெரிவிக்கலாம்’

கொத்தடிமைத் தொழிலாளா்கள் பணியாற்றுவது தெரிய வந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும் சாா்பு நீதிபதிபதியுமான ஆா்.சுப்பையா தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: கைதான 6 போ் மதுரை சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான 6 போ் மதுரை மத்திய சிறையிலடைக்கப்பட்டனா். மானாமதுரை அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 8 மாணவிகள... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவா்கள் போராட்டம்!

சிவகங்கை அருகே உரிய நேரத்தில் வராத அரசுப் பேருந்தை கிராம மக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனா். மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை மாவட்டம், அரசனூா் வரை கடந்த 40 ஆண்டுகளாக நகரப் பேருந்து ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன் தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மா... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை முன் மாா்க்சிஸ்ட் தா்னா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அரசு மருத்துவமனை முன்பு தா்னா நடத்தினா். மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்களை... மேலும் பார்க்க