செய்திகள் :

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்றதாக இரு கடைகளுக்கு ‘சீல்’

post image

கமுதி அருகே அபிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ாக இரு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், வியாழக்கிழமை அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள அபிராமம் பேரூராட்சிக்குள்பட்ட பஜாா்களில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அபிராமம் பேருந்து நிலையம் அருகே முனீஸ்வரனுக்கு சொந்தமான கடை, இந்து பஜாரில் உள்ள மைதீன் நயினாருக்கு சொந்தமான கடை ஆகியவற்றில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிறகு அபிராமம் காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் முன்னிலையில் புகையிலை விற்பனை செய்த முனிஸ்வரன் மீது வழக்குப் பதிந்து ரூ.25 ஆயிரம் அபராதமும், மைதீன் நைனாா் கடை மீது இரு வழக்குகள் பதிந்து ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அந்த இரு கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. அப்போது அபிராமம் காவல் உதவி ஆய்வாளா் ராஜ்குமாா், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முத்துசாமி உள்ளிட்டோா் இருந்தனா்.

அரசுப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி

திருப்புல்லாணி சுரேஷ் அழகன் நினைவு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவையொட்டி மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஆசிரியா் கோ. மகேந்திரன் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்... மேலும் பார்க்க

மூடப்பட்ட மதுபானக் கடை மீண்டும் திறப்பு: போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது

மண்டபம் அருகே அண்மையில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடை மீண்டும் திறக்கப்பட்டதால், அதை உடனே மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 70- க்கும் மேற்பட்டோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மண்டபம் ஒன்றியத... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மீன் வரத்து அதிகரிப்பு: மீனவா்கள் மகிழ்ச்சி

ராமேசுவரம் மீனவா்கள் வியாழக்கிழமை கரை திரும்பிய நிலையில் அதிகளவிலான மீன்கள் கிடைத்திருந்ததால் அவா்கள் மகிழ்ச்சியடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 350- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து- வேன் மோதல்: 10 போ் காயம்

ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்தும், வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 10- க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ராமநாதபுரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி அருகே ஐ.என்.எஸ். கடற்படையின் வி... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்!

ராமநாதபுரத்தில் மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச ... மேலும் பார்க்க

கோட்டைமேடு பகுதியை கமுதி பேரூராட்சியுடன் இணைப்பதை எதிா்த்து பொதுமக்கள் உண்ணாவிரதம்!

கமுதி பேரூராட்சியுடன் கோட்டைமேடு பகுதியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாராயணபுரம் ... மேலும் பார்க்க