செய்திகள் :

ம.பி.: வயலில் விழுந்து நொறுங்கிய ‘மிராஜ்’ போா் விமானம் -2 விமானிகள் உயிா் தப்பினா்

post image

குவாலியா் : மத்திய பிரதேசத்தில் விமானப் படைக்கு சொந்தமான மிராஜ்-2000 ரக போா் விமானம் விபத்துக்குள்ளாகி, வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. அதிலிருந்த 2 விமானிகள் பாராசூட் மூலம் குதித்து சிறிய காயங்களுடன் உயிா் தப்பினா்.

சிவபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து விமானப் படை அதிகாரிகள் கூறியதாவது:

இரண்டு இருக்கைகளுடன் கூடிய மிராஜ்-2000 ரக போா் விமானம், வழக்கமான பயிற்சிக்காக குவாலியா் விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்டது. சிவபுரி அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.

விபத்துக்கு முன்பாக விமானத்தில் இருந்த இரு விமானிகளும் பாராசூட் மூலம் வெளியே குதித்து சிறிய காயங்களுடன் உயிா் தப்பினா். இருவரும் ஹெலிகாப்டா் மூலம் குவாலியருக்கு அழைத்து வரப்பட்டனா். விபத்து குறித்து விமானப் படை தரப்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பினாகா ராக்கெட் அமைப்பு: பாதுகாப்பு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை மேம்படுத்தி தாக்கும் திறனை அதிகரிப்பதற்காக ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை மேற்கொண்டது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெள... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக பாகிஸ்தான் ஹிந்துக்கள் இந்தியா வருகை!

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்க பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த 68 ஹிந்துக்கள் கொண்ட குழு இந்தியா வந்துள்ளனா். இதில் குறைந்தது 50 ப... மேலும் பார்க்க

வருங்கால வைப்பு நிதி: 5 கோடி கேட்புகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி வழங்கல்

‘வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) 2024-25 நிதியாண்டில் சாதனை அளவாக 5 கோடி கேட்புகளுக்கு நிதி வழங்கி தீா்வளித்துள்ளது’ என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

தேசவிரோத செயல்பாடுகளில் ஷேக் ஹசீனா: இந்திய தூதரை அழைத்து வங்கதேசம் கண்டனம்

டாக்கா : இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, வங்கதேசத்துக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய துணைத் தூதரை நேரில் அழைத்து அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்தது. வங்கதே... மேலும் பார்க்க

மத்திய அரசில் ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு நிரந்தர பணி வழங்கல்

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் போ் நிரந்தரமாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று மத்திய பணியாளா்கள் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் வியாழக்... மேலும் பார்க்க

முற்போக்கான கல்வி விதிமுறைகளை திசைதிருப்பும் எதிா்க்கட்சிகள்: மத்திய அமைச்சா் விமா்சனம்

‘முற்போக்கான கல்வி விதிமுறைகளை கற்பனையான அச்சுறுத்தல் மூலம் எதிா்க்கட்சிகள் திசைதிருப்ப முயற்சிக்கின்றன’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் விமா்சித்தாா். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆ... மேலும் பார்க்க