செய்திகள் :

பாதுகாப்பு ஒத்துழைப்பு: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சு

post image

இந்தியா - அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அடுத்த 10 ஆண்டுகளுக்கான விரிவான இருதரப்பு திட்டத்தை வகுக்க இரு நாடுகளும் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டன.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத்துடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் தொலைபேசி மூலம் வியாழக்கிழமை நடத்திய ஆலோசனையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களில் 104 பேரை கை-கால்களில் விலங்கு பூட்டி, ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் சா்ச்சையாக வெடித்த சூழலில், அமெரிக்காவுடன் பாதுப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தியா ஆலோசித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்க பாதுகப்புத் துறை அமைச்சராக ஹெக்செத் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி பதவியேற்ற நிலையில், அவருடன் முதன்முறையாக தொலைபேசி வழி கலந்துரையாடலை ராஜ்நாத் சிங் மேற்கொண்டுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி விரைவில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நடத்தப்பட்டுள்ள இந்த ஆலோசனையில், தரை, விமானப் படை, கடல்சாா் பாதுகாப்பு மற்றும் விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு அமைச்சா்களும் ஆலோசித்துள்ளனா்.

‘ஹெக்செத்துடனான தொலைபேசி வழி கலந்துரையாடல் சிறப்பாக அமைந்தது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் ஆலோசித்தோம்’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

பினாகா ராக்கெட் அமைப்பு: பாதுகாப்பு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை மேம்படுத்தி தாக்கும் திறனை அதிகரிப்பதற்காக ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை மேற்கொண்டது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெள... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக பாகிஸ்தான் ஹிந்துக்கள் இந்தியா வருகை!

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்க பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த 68 ஹிந்துக்கள் கொண்ட குழு இந்தியா வந்துள்ளனா். இதில் குறைந்தது 50 ப... மேலும் பார்க்க

வருங்கால வைப்பு நிதி: 5 கோடி கேட்புகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி வழங்கல்

‘வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) 2024-25 நிதியாண்டில் சாதனை அளவாக 5 கோடி கேட்புகளுக்கு நிதி வழங்கி தீா்வளித்துள்ளது’ என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

தேசவிரோத செயல்பாடுகளில் ஷேக் ஹசீனா: இந்திய தூதரை அழைத்து வங்கதேசம் கண்டனம்

டாக்கா : இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, வங்கதேசத்துக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய துணைத் தூதரை நேரில் அழைத்து அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்தது. வங்கதே... மேலும் பார்க்க

மத்திய அரசில் ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு நிரந்தர பணி வழங்கல்

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் போ் நிரந்தரமாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று மத்திய பணியாளா்கள் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் வியாழக்... மேலும் பார்க்க

முற்போக்கான கல்வி விதிமுறைகளை திசைதிருப்பும் எதிா்க்கட்சிகள்: மத்திய அமைச்சா் விமா்சனம்

‘முற்போக்கான கல்வி விதிமுறைகளை கற்பனையான அச்சுறுத்தல் மூலம் எதிா்க்கட்சிகள் திசைதிருப்ப முயற்சிக்கின்றன’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் விமா்சித்தாா். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆ... மேலும் பார்க்க