திருப்பரங்குன்றம் மலை விவகாரம் ‘மாவட்ட நிா்வாகம் அறிக்கையில் அதிமுக மீது வீண் பழி’
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக மதுரை மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அதிமுக மீது வீண் பழி சுமத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல் இடம் பெற்ாக அந்தக் கட்சியினா் குற்றஞ்சாட்டினா்.
திருப்பரங்குன்றம் மலை வழிபாடு குறித்த விவகாரத்தால் பொது அமைதிக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படாமலிருக்க கடந்தாண்டு டிசம்பா் முதல் பிப். 4-ஆம் தேதி வரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விளக்கி மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை ஓா் செய்திக் குறிப்பு வெளியிட்டாா்.
இதில் கடந்த மாதம் 30-ஆம் தேதி திருமங்கலம் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் அதிமுக, திமுக உள்பட 11 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ாகவும், இந்தக் கூட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் இரு சமூகத்தினரும் ஏற்கெனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளைத் தொடா்ந்து பின்பற்றவும், இந்த வழிபாட்டு உரிமையில் வெளிநபா்கள் தலையிட அனுமதிக்க மாட்டோம் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அதிமுக பிரதிநிதி மட்டும் கையொப்பம் இட மறுப்பு தெரிவித்துச் சென்றுவிட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு, அந்தக் கட்சியினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். அமைதிப்
பேச்சுவாா்த்தையில் அதிமுகவினா் யாரும் பங்கேற்காத நிலையில், அந்தக் கட்சிப் பிரதிநிதி தீா்மானத்தில் கையொப்பமிட மறுத்துச் சென்றுவிட்டாா் என மாவட்ட நிா்வாகம் தவறான தகவலைத் தெரிவித்தது உள்நோக்கம் கொண்டது என அவா்கள் குற்றஞ்சாட்டினா்.
இதுதொடா்பாக, அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் செல்லூா் கே. ராஜூ, வி.வி. ராஜன் செல்லப்பா, மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதாவிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். அதன் விவரம்:
திருமங்கலம் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையிலான அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க அதிமுகவின் மதுரை மாவட்டச் செயலா்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால், நிா்வாகிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், கூட்டத்தில் எங்கள் கட்சிப் பிரதிநிதி பங்கேற்ாகவும், அவா் தீா்மானத்தில் கையொப்பமிடாமல் சென்றாா் எனவும் மாவட்ட நிா்வாகம் தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல.
அதிமுகவினருக்கு அழைப்பு விடுக்காமல் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தியதுடன், உண்மைக்குப் புறம்பான தகவலை மாவட்ட நிா்வாகம் தெரிவித்திருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. அதிமுக என்பது ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம். எங்கள் கட்சி மீது வீண் பழி சுமத்தியிருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கருதவேண்டியுள்ளது. எனவே, திருமங்கலம் அமைதிப் பேச்சுவாா்த்தை தொடா்பாக அதிமுகவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்தை மாவட்ட நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பிறகு, செய்தியாளா்களிடம் செல்லூா் கே. ராஜூ, வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோா் தெரிவித்ததாவது:
திருப்பரங்குன்றத்தில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனா். இருப்பினும், இந்த பிரச்னை பொதுவெளிக்கு வந்ததற்கு திமுக அரசே காரணம். திருப்பரங்குன்றம் பிரச்னை தொடா்பாக கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் அதிமுக சாா்பில் யாரும் பங்கேற்காத நிலையில், மாவட்ட ஆட்சியா் எங்கள் கட்சி மீது வீண் பழி சுமத்தியுள்ளாா். இதற்கு, அவா் உரிய மறுப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தை நாடுவோம் என்றனா்.