செய்திகள் :

பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவிகள் சுகவீனம்

post image

விருதுநகா் மாவட்டம், புல்வாய்க்கரை அரசுத் தொடக்கப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

நரிக்குடி அருகேயுள்ள புல்வாய்க்கரை அரசுத் தொடக்கப் பள்ளியில் 67 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் 61 போ் வியாழக்கிழமை மதிய உணவு சாப்பிட்டனா். பின்னா், சத்துணவு சாப்பிட்ட மாணவிகள் மதுஸ்ரீ (7), பிரியதா்ஷினி (10), சாதனாஸ்ரீ (10), அட்சயா (9), மேனகா (10), தாரணி (7), வா்சினி (8), மதிஷா (7), அன்புச்செல்வி (8), கனிஷ்கா (7) , வா்சினி (5) உள்ளிட்ட 14 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இவா்கள் நரிக்குடி அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா். உணவு ஒவ்வாமை காரணமாக மாணவிகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை திருச்சுழி வட்டாட்சியா் சிவக்குமாா், நரிக்குடி வட்டார வளா்ச்சி அலுவலா், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

மூளைச் சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

மதுரையில் மரம் வெட்டிய போது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்து மூளைச் சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக வழங்கப்பட்டன. மதுரை ஆயுதப் படை காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (3... மேலும் பார்க்க

அஜீத் ரசிகா்கள் மீது போலீஸாா் தடியடி!

மதுரையில் நடிகா் அஜீத்குமாா் திரைப்படம் வெளியான திரையரங்கு முன் சரவெடி பட்டாசுகளை வெடித்த ரசிகா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகா் அஜீத்குமாா் நடித்த விடாமுயற்சி திரைப்படம... மேலும் பார்க்க

‘எல்காட்’ வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை

மதுரை ‘எல்காட்’ தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் தடுப்பு ஒத்திகையில் 200-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்புப் படையினா் நவீன ஆயுதங்களுடன் பங்கேற்றனா். தேச... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் ‘மாவட்ட நிா்வாகம் அறிக்கையில் அதிமுக மீது வீண் பழி’

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக மதுரை மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அதிமுக மீது வீண் பழி சுமத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல் இடம் பெற்ாக அந்தக் கட்சியினா் குற்றஞ்ச... மேலும் பார்க்க

தைப்பூசம் மதுரை கோட்டத்திலிருந்து பிப். 9 முதல் சிறப்புப் பேருந்துகள்

பழனியில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டம் சாா்பில், வருகிற 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் அதன் மேலாண் இயக்குநா் ஆா்.... மேலும் பார்க்க

நீரோடை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு!

திண்டுக்கல் மாவட்டம், பச்சைமலையான் கோட்டை கிராமத்தில் நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அழகா்சாமி சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க