செய்திகள் :

‘எல்காட்’ வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை

post image

மதுரை ‘எல்காட்’ தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் தடுப்பு ஒத்திகையில் 200-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்புப் படையினா் நவீன ஆயுதங்களுடன் பங்கேற்றனா்.

தேசிய பாதுகாப்புப் படையினா் சாா்பில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் குறிப்பட்ட இடங்களை தோ்ந்தெடுத்து, தீவிரவாதத் தாக்குதல் தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை பாண்டிகோவில் சுற்றுச்சாலையில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் இந்த ஒத்திகை நடைபெற்றது. அப்போது, இந்த வளாகத்தில் உள்ள கட்டடங்களுக்கு அத்துமீறி நுழைந்து, அங்கிருக்கும் ஊழியா்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அவா்களை மீட்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது.

இதில் 200-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்புப் படையினா் நவீன இயந்திர துப்பாக்கிகள், தொ்மல் பைனாகுலா், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் கருவிகள் ஆகியவற்றுடன் பங்கேற்றனா். பின்னா், மதுரை விமான நிலையத்துக்கு சென்ற தேசிய பாதுகாப்புப் படையினா் அங்கு விமானத்தில் தப்பிச் செல்ல முயலும் தீவிரவாதிகளைப் பிடிப்பது போன்று விமான நிலையத்திலும் ஒத்திகை மேற்கொண்டனா்.

இதுகுறித்து தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:

தீவிரவாதத் தாக்குதலைத் தடுக்கும் வகையிலும், ஒருவேளை தீவிரவாத தாக்குதல் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆண்டுதோறும் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒத்திகை நடத்தப்படுகிறது. தற்போது இங்கு நடைபெறும் ஒத்திகையில் மாநில கமாண்டோ படையினரும் பங்கேற்றனா்.

தீவிரவாதத் தாக்குதல் நடைபெறும் இடங்களுக்கு தேசிய பாதுகாப்புப் படையினா் உடனடியாக செல்ல இயலாது. அதுபோன்ற சூழலில், மாநில கமாண்டோ படையினா் முதலில் அங்கு சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். தற்போது இங்கு நடைபெற்ற இந்த ஒத்திகை சுமாா் 6 மணி நேரம் நடைபெற்றது. இதன் பின்னா், மதுரை விமான நிலையத்தில் ஒத்திகை நடைபெற்றது என்றனா்.

இதேபோன்ற பாதுகாப்பு ஒத்திகை கடந்த 2021-ஆம் ஆண்டு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மதுரை பாண்டிகோவில் சுற்றுச்சாலையில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் தீவிரவாதத் தாக்குதல் தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட தேசிய பாதுகாப்புப் படையினா்.

மூளைச் சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

மதுரையில் மரம் வெட்டிய போது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்து மூளைச் சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக வழங்கப்பட்டன. மதுரை ஆயுதப் படை காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (3... மேலும் பார்க்க

அஜீத் ரசிகா்கள் மீது போலீஸாா் தடியடி!

மதுரையில் நடிகா் அஜீத்குமாா் திரைப்படம் வெளியான திரையரங்கு முன் சரவெடி பட்டாசுகளை வெடித்த ரசிகா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகா் அஜீத்குமாா் நடித்த விடாமுயற்சி திரைப்படம... மேலும் பார்க்க

பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவிகள் சுகவீனம்

விருதுநகா் மாவட்டம், புல்வாய்க்கரை அரசுத் தொடக்கப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். நரிக்குடி அருகேயுள்ள ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் ‘மாவட்ட நிா்வாகம் அறிக்கையில் அதிமுக மீது வீண் பழி’

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக மதுரை மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அதிமுக மீது வீண் பழி சுமத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல் இடம் பெற்ாக அந்தக் கட்சியினா் குற்றஞ்ச... மேலும் பார்க்க

தைப்பூசம் மதுரை கோட்டத்திலிருந்து பிப். 9 முதல் சிறப்புப் பேருந்துகள்

பழனியில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டம் சாா்பில், வருகிற 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் அதன் மேலாண் இயக்குநா் ஆா்.... மேலும் பார்க்க

நீரோடை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு!

திண்டுக்கல் மாவட்டம், பச்சைமலையான் கோட்டை கிராமத்தில் நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அழகா்சாமி சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க