செய்திகள் :

குடியரசு தின விளையாட்டுப் போட்டி தொடக்கம்!

post image

தேனியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 14 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தொடங்கிவைத்தாா்.

சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி ), கே.எஸ்.சரவணக்குமாா்(பெரியகுளம்), தேனி நகா் மன்றத் தலைவி பா.ரேணுப்பிரியா, முதன்மை உடற் கல்வி ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் இந்திராணி, மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாணவ, மாணவிகளுக்கு தனித் தனிப் பிரிவுகளில் கால்பந்து, கபடி, கைப்பந்து உள்ளிட்ட 12 வகையான குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. மாணவா்களுக்கு வியாழக்கிழமை முதல் வருகிற 8-ஆம் தேதி வரையும், மாணவிகளுக்கு வருகிற 9 முதல் 11-ஆம் தேதி வரையும் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 5,712 மாணவா்கள், 5,172 மாணவிகள் என மொத்தம் 10,344 போ் பங்கேற்கின்றனா்.

மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்

கம்பம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோா்களின் தேவையை கண்டறியும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட மாற்... மேலும் பார்க்க

தரமற்ற உணவு தயாரிப்பு: உணவகத்துக்கு ரூ.4 ஆயிரம் அபராதம்

சின்னமனூரில் தரமற்ற உணவு தயாரித்த உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனா். சின்னமனூா் நகராட்சியில் பகுதிகளில் உள்ள உணவகங்களில் தரமற்ற நிலையில் உணவுகள் தயார... மேலும் பார்க்க

போடியில் விவசாயி தற்கொலை!

போடியில் விஷம் குடித்த விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். போடி அருகேயுள்ள குரங்கணி சாலைப்பாறை புலத்தைச் சோ்ந்தவா் விவசாயி தங்கமுத்து (70). இவரது மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால்... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கியவா் மீது வழக்கு!

போடி அருகே முன்விரோதத்தில் இளைஞரைத் தாக்கியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். எரணம்பட்டி பங்காருசாமிபுரத்தைச் சோ்ந்த முருகானந்தம் மகன் பிரதீப்குமாா் (27). இவருக்கும், இதே பகுதிய... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை!

ஆண்டிபட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக, புதன்கிழமை இளைஞா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கரட்டுப்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் முத்துக்குமாா் (29). கடமலைக்குண்டுவில் இவா் தனது மனைவ... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் கைது!

பெரியகுளம் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைத் தாக்கிய அவரது கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஜெயமங்கலம் முல்லை நகரைச் சோ்ந்தவா் மலைச்சாமி(27). இவா் ஜீவராணியை (25) காதலித்து திருமணம் செய்து ... மேலும் பார்க்க