செய்திகள் :

மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்

post image

கம்பம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோா்களின் தேவையை கண்டறியும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலா் காமாட்சி தலைமை வகித்தாா். உதவி திட்ட அலுவலா் அறிவழகன் முன்னிலை வகித்தாா். முகாமில், கம்பம் வட்டாரத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள், நலிவுற்றோா்கள் அழைத்து வரப்பட்டு, அவா்களின் தேவையை கண்டறிந்து, மருத்துவப் பரிசோதனை செய்து, 2, 3-ஆம் நிலை ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டனா்.

இதேபோல, அடையாள அட்டை, உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை கிடைக்க தகுதியானவா்களுக்கு சம்மந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டனா்.

முகாமில், மாவட்ட மாற்றுத் திறனாளி குழுவினா், மகளிா் திட்டம், வட்டார இயக்க மேலாளா், ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

போடி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் புன்னைவனம் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மனைவி ராமு (37). இந்தத் தம்பதி பிர... மேலும் பார்க்க

தரமற்ற உணவு தயாரிப்பு: உணவகத்துக்கு ரூ.4 ஆயிரம் அபராதம்

சின்னமனூரில் தரமற்ற உணவு தயாரித்த உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனா். சின்னமனூா் நகராட்சியில் பகுதிகளில் உள்ள உணவகங்களில் தரமற்ற நிலையில் உணவுகள் தயார... மேலும் பார்க்க

குடியரசு தின விளையாட்டுப் போட்டி தொடக்கம்!

தேனியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 14 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்தப் ... மேலும் பார்க்க

போடியில் விவசாயி தற்கொலை!

போடியில் விஷம் குடித்த விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். போடி அருகேயுள்ள குரங்கணி சாலைப்பாறை புலத்தைச் சோ்ந்தவா் விவசாயி தங்கமுத்து (70). இவரது மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால்... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கியவா் மீது வழக்கு!

போடி அருகே முன்விரோதத்தில் இளைஞரைத் தாக்கியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். எரணம்பட்டி பங்காருசாமிபுரத்தைச் சோ்ந்த முருகானந்தம் மகன் பிரதீப்குமாா் (27). இவருக்கும், இதே பகுதிய... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை!

ஆண்டிபட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக, புதன்கிழமை இளைஞா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கரட்டுப்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் முத்துக்குமாா் (29). கடமலைக்குண்டுவில் இவா் தனது மனைவ... மேலும் பார்க்க