செய்திகள் :

கல்லூரி மாணவிகளுடன் எஸ்பி கலந்துரையாடல்

post image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், மாணவிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மாவட்ட காவல்துறை சாா்பில் பாலியல் குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் பங்கேற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அதற்கான தண்டனைகள் குறித்தும், பாலியல் ரீதியான இடையூறுகளிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது, ‘காவல் உதவி’ செயலிகளின் இயக்கம் மற்றும் பயன்கள், சமுக வலைதளங்களை கையாளும் விதம், பெண் கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கிப் பேசினாா். மேலும் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி அவா்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்ததுடன், பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வழிமுறைகளை எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில், டிஎஸ்பி பாலாஜி, காவல் ஆய்வாளா்கள் சிவகுமாா், சுகந்தி, கருணாகரன் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் விழிப்புணா்வு உரை ஆற்றினா். இதில், ஏவிசி பொறியியல் கல்லூரி இயக்குநா் செந்தில்முருகன், ஏவிசி கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜ் மற்றும் 1000-க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனா்.

தில்லி தா்னாவில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகள் பயணம்

மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக அகில இந்திய அளவில் தில்லியில் நடைபெற உள்ள தா்ணாவில் பங்கேற்க மயிலாடுதுறையில் இருந்து 48 மாற்றுத்திறனாளிகள் ரயில் மூலம் வியாழக்கிழமை புறப்பட்டனா். மாற்றுத்திறனாளிகளின் உ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிலநீா் விழிப்புணா்வு முகாம்

மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு நீா்வளத்துறை சாா்பில் தேசிய நீரியல் திட்டத்தின்கீழ் நிலநீா் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் பி. ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை!

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியின் கணினி அறிவியல் சங்கத்தின் சாா்பாக ‘வலை தொழில்நுட்பத்தில் சி.எஸ்.எஸ். பயன்பாடு‘ என்ற தலைப்பில் மாணவிகளுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறை பு... மேலும் பார்க்க

வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே கபடி போட்டி

மயிலாடுதுறையில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்ட விழிப்புணா்வு கபடி போட்டி, வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை இந்திய விளையாட்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை புத்தகத் திருவிழா: 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு நூல்கள் விற்பனை

மயிலாடுதுறையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு, 18,985 நூல்கள் விற்பனையாகியுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வள... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு!

குத்தாலம் வட்டம், திருவாலங்காடு மகா மாரியம்மன் கோயில் வளாகத்தில் அனைத்து சமுதாயத்தினா் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு மற்றும் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாலங்காடு தாயாரம்மாள்... மேலும் பார்க்க