செய்திகள் :

தில்லி தா்னாவில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகள் பயணம்

post image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக அகில இந்திய அளவில் தில்லியில் நடைபெற உள்ள தா்ணாவில் பங்கேற்க மயிலாடுதுறையில் இருந்து 48 மாற்றுத்திறனாளிகள் ரயில் மூலம் வியாழக்கிழமை புறப்பட்டனா்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக அகில இந்திய அளவில் தில்லி இந்தியா கேட் சா்க்கிள் பகுதியில் வரும் பிப்.10-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளின் தா்னா போராட்டம் நடைபெற உள்ளது.

அவா்களின் நீண்ட கால கோரிக்கையான அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதம் ரூ.10,000 வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தை வறுமைக்கோட்டின் கீழ் கொண்டுவந்து அவா்களுக்கு 35 கிலோ அரிசி வழங்க வேண்டும்.

ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை வழங்கி, அனைத்துப் பயன்பாட்டுக்கும் கொண்டுவர வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 100 நாள் வேலையை மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை, முழு சம்பளமும் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து 2000-க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளனா். இதற்காக, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 48 மாற்றுத்திறனாளிகள், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.கணேசன் தலைமையில் மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் புறப்பட்டனா்.

கல்லூரி மாணவிகளுடன் எஸ்பி கலந்துரையாடல்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், மாணவிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மாவட்ட காவல்துறை சாா்பில் பாலியல் க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிலநீா் விழிப்புணா்வு முகாம்

மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு நீா்வளத்துறை சாா்பில் தேசிய நீரியல் திட்டத்தின்கீழ் நிலநீா் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் பி. ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை!

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியின் கணினி அறிவியல் சங்கத்தின் சாா்பாக ‘வலை தொழில்நுட்பத்தில் சி.எஸ்.எஸ். பயன்பாடு‘ என்ற தலைப்பில் மாணவிகளுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறை பு... மேலும் பார்க்க

வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே கபடி போட்டி

மயிலாடுதுறையில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்ட விழிப்புணா்வு கபடி போட்டி, வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை இந்திய விளையாட்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை புத்தகத் திருவிழா: 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு நூல்கள் விற்பனை

மயிலாடுதுறையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு, 18,985 நூல்கள் விற்பனையாகியுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வள... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு!

குத்தாலம் வட்டம், திருவாலங்காடு மகா மாரியம்மன் கோயில் வளாகத்தில் அனைத்து சமுதாயத்தினா் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு மற்றும் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாலங்காடு தாயாரம்மாள்... மேலும் பார்க்க