செய்திகள் :

இலங்கை: செம்மணி மனித புதைகுழிகள்; மனித உரிமை மீறலுக்கு நீதி வேண்டி நடைபெற்ற தீப்பந்தப் போராட்டம்!

post image

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறலுக்கு எதிராக குறிப்பாக செம்மணி பகுதியில் அதிகளவிலான குழந்தைகள் கொன்று புதைக்கப்பட்ட மனித புதைகுழிகளுக்கு எதிராக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இலங்கை யாழ்ப்பாண செம்மணி வளைவுப் பகுதியில் வடக்கு- கிழக்கு  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் சார்பாக நடைபெற்று வந்தது.

கடைசி நாளான புதன்கிழமை அன்று செம்மணி மனிதப் புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் எலும்பு கூட்டுத் தொகுதிகளுக்கு நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டமும், தீப்பந்தப் போராட்டமும் நடைபெற்றது. இதில் உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த்தேசியப் பேரவையின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்

யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், தமிழின அழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், செம்மணி, கொக்குத் தொடுவாய், மன்னார் மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையை நிராகரித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீயிட்டு எரித்தனர்.

போராட்டத்தின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனு வாசிக்கப்பட்டு, மனுவானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

- செ. கிரிசாந்

கரூர் மரணங்கள்: "அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள்; அரசுதான் பொறுப்பு" - திமுக-வை சாடும் இபிஎஸ்

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தில் நீதிமன்ற விசாரணை, அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற... மேலும் பார்க்க

RSSக்கு புகழாரம் - ஆளும் தி.மு.க அரசு மீது கடும் விமர்சனம்; ஆளுநர் ஆர்.என்.ரவி அட்டாக்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கும் இடையேயான அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில், "1925-ல் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் தொடங்கிய ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்... மேலும் பார்க்க

விஜய் பேச்சு எப்படி இருந்தது? - சீமான் விளக்கம்

விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போ... மேலும் பார்க்க

Ooty: பராமரிப்பு இல்லை, ஆக்கிரமிப்பு - எங்க சார் நடக்குறது? | Photo Album

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு தாவரவியல் பூங்கா நடைபாதைஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு தாவரவியல் பூங்கா நடைபாதைஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு தாவரவியல் பூங்கா நடைபாதைஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆவின் ஜங்ஷன் நடைபாதைஆக்கி... மேலும் பார்க்க

முடங்கிய அமெரிக்க அரசாங்கம்: 'கூல்' மோடில் ட்ரம்ப்; இந்தியாவிற்கு ஒரு பாசிட்டிவ் சிக்னல்- முழு அலசல்

அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட அரசாங்க நிதி ஒதுக்கீடு மசோதா தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால், அமெரிக்காவின் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் வேலையிழப்புகள், பல்வேறு அரசு நிர்வாகங்கள் முடக்... மேலும் பார்க்க

கரூர் துயரம்: "பிணங்களின் மீது சில தலைவர்கள் அரசியல் செய்கின்றனர்" - செல்வப்பெருந்தகை வேதனை!

நாடாளுமன்ற தேர்தல் வாக்குத்திருட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க