செய்திகள் :

இஸ்ரேல் தாக்குல்: காஸாவில் 17 பேர் பலி!

post image

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும், இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 18 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் காஸாவின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்துள்ளன.

கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கவோ, இடிபாடுகளை அகற்றி சரி செய்யவோ போதிய கனரக வாகனங்களின்றி காஸா நிர்வாகம் தவித்து வருகிறது. மனிதாபிமான உதவிகளைச் செய்துவரும் நட்பு நாடுகளின் உதவியால் சில கனரக வாகனங்கள் இடிபாடுகளையும் கட்டடக் குவியல்களையும் அகற்றி மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதல் மூலம் 14 உயிர்கள் பறித்ததுடன், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 9 கனரக வாகனங்களையும் அழித்துள்ளது.

இது குறித்து வடக்கு காஸாவின் ஜபாலியா நிர்வாகம் கூறியதாவது, ஜனவரி மாதத்திலிருந்து உதவிக்கரம் நீட்டிவரும் எகிப்து, கத்தார் நாடுகள் கொடுத்த புல்டோசர்கள் வாகனங்கள் நிறுத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இஸ்ரேல் அதனைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

போர் நிறுத்தத்தை கடந்த மார்ச் மாதம் இஸ்ரேல் முறித்துக் கொண்டது. தற்போது காஸாவிலுள்ள பாலஸ்தீனர்களைக் குறிவைத்து மீண்டும் தாக்குதலைத் தொடங்கி முன்னேறி வருகிறது. இதனால், உணவு, மருந்துப் பொருள்கள், எரிபொருள் என அனைத்துவிதமான இறக்குமதிகளும் சீர்குலைந்துள்ளன.

தண்ணீர் தொட்டிகள் மற்றும் செல்போன் டவர்களைக் குறிவைத்தும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க:ஜப்பானில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்!

போப் பிரான்சிஸுக்கு ஏப். 26-ல் இறுதிச் சடங்கு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது. 266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் பொதுத் தோ்தல்

ஆஸ்திரோலியாவில் பொதுத் தோ்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போப் பிரான்சிஸ் மறைவைத் தொடா்ந்து பல்வேறு தோ்தல் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் வழக்கமான பரபரப்பு இல்லாமல்... மேலும் பார்க்க

ஹிந்து தலைவா் கொலை: இந்தியாவின் குற்றச்சாட்டை நிராகரித்தது வங்கதேசம்

வங்கதேசத்தில் ஹிந்து மத தலைவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக இந்தியா முன்வைத்த குற்றச்சாட்டை வங்கதேசம் நிராகரித்தது. வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசினாவுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்து அ... மேலும் பார்க்க

புதிய காஸா போா் நிறுத்த திட்டம் முன்வைப்பு: ஹமாஸ்

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான புதிய செயல்திட்டத்தை கத்தாா் மற்றும் எகிப்து மத்தியஸ்தா்கள் முன்வைத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், புதிய... மேலும் பார்க்க

‘உக்ரைனுடன் நேரடி பேச்சுவாா்த்தைக்கு புதின் தயாா்’

உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து அந்த நாட்டுடன் நேரடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட ரஷிய அதிபா் தயாராக இருப்பதாக அவரின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளாா். இது குறித்து செய்திய... மேலும் பார்க்க

டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை. வழக்கு!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான நிதியை நிறுத்திவைக்க அமெரிக்க அரசு உத்தரவிட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சீர்திருத்தங... மேலும் பார்க்க