செய்திகள் :

உக்ரைனில் 500 டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

post image

உக்ரைன் எல்லைக்குள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இன்று (அக். 20) குற்றம் சாட்டினார்.

மேலும், 20 வெவ்வேறு வகையான ஏவுகணைத் தாக்குதல், 800 ஏரியல் வெடிகுண்டுகள் மூலமும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி பதிவிட்டுள்ளதாவது,

''அனைத்து நாள்களிலும் எங்கள் நிலைகளின் மீதும் மக்கள் குடியிருப்புகளின் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இது எங்கள் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல்.

ரஷிய தீவிரவாதிகள் உக்ரைனின் எல்லைப்பகுதிகளில், இந்த வாரத்தில் மட்டும் 20 வகையான ஏவுகணைகள், 500 டிரோன்கள், 800 வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட உலக நாடுகளால், இந்தத் திட்டமிட்ட தாக்குதலுக்கு எதிராக நிற்க முடியும். நீண்ட திறன் கொண்ட அதிக வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு உக்ரைனுக்குத் தேவைப்படுகிறது. இதைப் புரிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவளிக்கும் அனைத்து நட்பு நாடுகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் - ரஷியா போர்

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த 4 மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷியா கைப்பற்றியது.

அந்த மாகாணங்களில் எஞ்சிய பகுதிகளை கைப்பற்ற ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் போரிட்டு வருகின்றன.

பாகிஸ்தான்: போலியோ பாதிப்பு 39-ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மேலும் இரு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39-ஆக அதிகரித்துள்ளது. இத்துட... மேலும் பார்க்க

குண்டுவீச்சில் மேலும் 87 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் மேலும் 87 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:வடக்கு காஸா பகுதியிலுள்ள பல்வேறு குடியிருப்புக... மேலும் பார்க்க

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர பிரதிநிதித்துவம்: ரஷியா ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று ரஷியா தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று இந்தியா... மேலும் பார்க்க

இஸ்ரேல் தொடா்பான ரகசிய ஆவணக் கசிவு: அமெரிக்கா விசாரணை

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான இஸ்ரேலின் திட்டம் குறித்த தங்கள் நாட்டின் ரகசிய புலனாய்வு அறிக்கை ஆவணம் கசிந்தது குறித்து அமெரிக்கா விசாரணையைத் தொடங்கியுள்ளது.காஸா போரின் ஒரு பகுதியாக, ஈரான் சென்றி... மேலும் பார்க்க

இந்தோனேசியா அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பொறுப்பேற்பு

இந்தோனேசியாவின் 8-ஆவது அதிபராக ராணுவ முன்னாள் தலைமைத் தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான பிரபோவோ சுபியாந்தோ ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா் (படம்).இதுவரை அதிபராக இருந்த ஜோகோ விடோடோவை எதிா்த்து கடந்த 2014... மேலும் பார்க்க

காஸா குடியிருப்புகளில் தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம்

காஸாவின் பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படைப் பிரிவினருக்கும் இடையிலான போ... மேலும் பார்க்க