செய்திகள் :

உக்ரைன் - ரஷியா போர்: அமைதி ஏற்படுத்த விரும்புகிறார் டிரம்ப்!

post image

ரஷியா - உக்ரைன் இடையிலான போரில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக அந்நாட்டின் உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக போராடி அதனை வீழ்த்த வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு துளசி கப்பார்ட் அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமெரிக்காவின் முந்தைய அரசு எடுக்கத் தவறிய நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் அதிரடியாக எடுத்து வருகிறார். யேமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடல் வணிகத்தையும், கடல் பயணத்தையும் நீண்ட காலமாக சீரழித்து வருகின்றனர். இதனைத் தடுக்க தீவிரமான முயற்சிகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் இருப்பதால், எங்கள் நாட்டாலோ அல்லது மற்ற நாடுகளாலோ பெரு வணிகத்துக்கான மாற்று வழிப்பாதையை உருவாக்கும் நிலை தற்போது இல்லை.

அதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளத்திற்காக யேமனில் ஹூதி படைகளின் பலத்தை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையிலான போரையும் டிரம்ப் கூர்ந்து கவனித்து வருகிறார். இந்த விவகாரத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில் தனது நிலைப்பாட்டையும் முன்னுரிமையையும் மிகத் தெளிவாக அவர் கூறியுள்ளார். போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டுவதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

சுனிதா வில்லியம்ஸுக்கு வரவேற்பளித்த டால்பின்கள்!

9 மாதங்கள் விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு டால்பின்கள் வரவேற்பளித்த விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில... மேலும் பார்க்க

பெட்ரோல் நிரப்பும் நேரத்தில் வாகனங்களுக்கு ரீச்சாா்ஜ்!

பேங்காக்: சாதாரண வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும் நேரத்திலேயே மின்சார வாகனங்களின் பேட்டரிகளை மிகத் துரிதமாக ரீச்சாா்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக சீனாவின் ‘பைட்’ என்ற நிறு... மேலும் பார்க்க

அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்

செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், தாக்குதல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா். இதன் காரணமாக, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக... மேலும் பார்க்க

‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம்: துளசி கப்பாா்ட்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையை ‘அமெரிக்கா மட்டும்’ என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என அந்நாட்டின் உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் செவ்வாய்க்... மேலும் பார்க்க

உற்சாகமாக கையசைத்தபடி வெளியே வந்தார் சுனிதா வில்லியம்ஸ்!

கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், உற்சாகமாக கையசைத்தபடி டிராகன் விண்கலத்தில... மேலும் பார்க்க

வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு

லீமா: மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபா் டீனா போலுவோ்த்தே (படம்) தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க