செய்திகள் :

`உதயநிதியைக் கூப்பிடுவேன்..!' - மெரினாவில் வாக்குவாதம் செய்த நபர்... போலீஸ் விசாரணை!

post image

சென்னையில் நள்ளிரவு நேரத்தில் போலீஸார் ரோந்து பணி, வாகனச் சோதனையில் ஈடுபடுவது உண்டு. சம்பவத்தன்று போலீஸார், மெரினா சர்வீஸ் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தச் சாலையில் சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக நின்றுக் கொண்டிருந்தது. உடனடியாக போலீஸார் அங்குச் சென்று விசாரித்தனர். அப்போது காருக்குள் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தனர். அவர்களிடம் நள்ளிரவு நேரத்தில் இங்கு நிற்க வேண்டாம். வீட்டுக்குச் செல்லுங்கள் என போலீஸார் கூறினர். அதற்கு அந்த ஆண், போலீஸாரை தரக்குறைவாக பேசினார். அவரின் அருகிலிருந்த பெண், ஆணுக்கு சப்போர்ட்டாக பேசத் தொடங்கினார். இதையடுத்து போலீஸார், அவர்களை தங்களின் செல்போனில் வீடியோ எடுத்தனர்.

மிரட்டல் ஜோடி

இதையடுத்து அந்த ஆணும் பெண்ணும் போலீஸார் எடுத்த வீடியோவுக்கு போஸ் கொடுத்தனர். நீங்கள் யார் என்று கேட்டதும், இருவரும் வீடியோவுக்கு போஸ் கொடுத்து கிண்டல் செய்தனர். மேலும், நான் உதயநிதி ஸ்டாலினை இங்கேயே கூப்பிடுவேன் பார்க்கிறேயா? என போலீஸாரை மிரட்டும் தொனியில் அந்த ஆண் பேசினார். மேலும் வையாபுரி மூஞ்சு, பல்லி மூஞ்சு என போலீஸாரை கிண்டல் செய்தார். சிறிது நேரம் கழித்து அந்த ஆண், பெண்ணை காரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். இந்த தகவலை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸார் தங்களின் உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இந்தச் சூழலில்தான் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, மெரினாவில் நள்ளிரவு நேரத்தில் காரிலிருந்த அவர்களை வீட்டுக்குச் செல்லும்படி கூறினோம். ஆனால் அவர்களோ போலீஸாரை தரக்குறைவாக பேசியுள்ளனர். இதுகுறித்து காவலர் சிலம்பரசன் என்பவர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதனால் காரின் பதிவு நம்பரைக் கொண்டு விசாரித்து வருகிறோம். எங்களின் முதற்கட்ட விசாரணையில் காரில் வந்தது மோகன் என்ற தகவல் மட்டும் கிடைத்திருக்கிறது. மேலும் அவர் கார் பிசினஸில் ஈடுபட்டு வருகிறார். சட்டப்படி அவருக்கு சம்மன் கொடுத்து விசாரணை நடத்திய பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஹைதராபாத்: மதுபானக் கூடத்தில் ஆபாச நடனம்... பார்ட்டி - 40 இளம்பெண்கள் உட்பட 140 பேர் கைது!

ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் ஆபாச நடனமாடிய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 40 இளம்பெண்கள் உள்பட மதுபோதையில் திளைத்த 140 பேரை பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார் கைது செய்து, மதுபானக் க... மேலும் பார்க்க

`ஜாமீன் கிடையாது' - பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

பாலியல் வழக்கில் சிக்கிய மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் கோரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. முன்னதாக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் சமயத... மேலும் பார்க்க

``ஓவர் போதையில் இருந்ததால்..." - போலீசை மிரட்டிய வைரல் நபர்கள்; மன்னிப்புக் கேட்கும் வீடியோ

சென்னை மெரினா லூப் சாலையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரும் இன்று மன்னிப்புக் கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர் சென்னைக் காவல்துறையினர்.`உதயநிதியைக் கூப்பிடுவேன்..!' - மெரினாவில் வ... மேலும் பார்க்க

டேட்டிங் ஆப்பில் சிக்கும் இளைஞர்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல்... விசாரணையில் அம்பலம்!

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகும் பெண்களிடம் மோசடி செய்வது போன்ற சம்பவங்களும் நடக்கிறது. ஆனால் மும... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்; கிராம மக்களிடம் சிக்கிய மின் வாரிய ஊழியர் கைது!

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாய் பேச முடியாத மனநலம் பாதிக்கப்பட்டவர். அப்பகுதியை சேர்ந்த தம்பதியினர் அந்த பெண்ணை தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வளர்ப்பு... மேலும் பார்க்க

ஒரே நாளில் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்... 17 வயது சிறுவன் கைது! - நடந்தது என்ன?

கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை செயல்பட்டுவரும் நிலையில், இந்த வ... மேலும் பார்க்க