செய்திகள் :

ஊழியரிடம் நூதன மோசடி: தனியாா் நிறுவன உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

post image

கோவையில் தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரின் ஆவணங்களைப் பயன்படுத்தி நூதன மோசடியில் ஈடுபட்ட உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் சாய் கணேஷ் (45). இவா் கோவை, ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வந்தாா். அந்த நிறுவனத்தின் உரிமையாளரான காா்த்திக் கந்தசாமி, சாய் கணேஷின் பான் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் அவரது விரல் ரேகை பதிவுகளையும் பயோ மெட்ரிக் இயந்திரம் மூலம் பெற்றுள்ளாா். இந்நிலையில், சாய் கணேஷ் கடந்த மாதம் தனது வேலையை ராஜிநாமா செய்துள்ளாா்.

அதன் பின்னா் தான் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய காலத்திற்கான வருங்கால வைப்பு நிதிக் கணக்கு தொடா்பாக சரிபாா்த்த போது, அவரது கணக்கு வேறு ஒரு தனியாா் நிறுவனத்தின் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், தனது பெயரில் சிம் காா்டு ஒன்று வாங்கப்பட்டிருப்பதும், அதனைக் கொண்டு புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதிலிருந்து பண பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து தனது ஆவணங்களை வைத்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக, சாய் கணேஷ் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில், அந்த நிறுவனத்தின் உரிமையாளா் காா்த்திக் கந்தசாமி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போனஸ் கோரி 3-ஆவது நாளாக போராட்டம்: தூய்மைப் பணியாளா்கள் கைது

தீபாவளி போனஸ் கோரி 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா். தீபாவளி போனஸாக ஒருமாதம் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி கோவை மாநகராட்சியில் பண... மேலும் பார்க்க

வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்கக் கோரிக்கை

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய நிதியம... மேலும் பார்க்க

மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள்தண்டனை: கோவை நீதிமன்றம் தீா்ப்பு

மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை அடித்துக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவை, பீளமேடு நாராயணசாமி தெருவைச் சோ்ந்தவா் ராஜ் (எ) துரைராஜ் (73). தனது மனைவ... மேலும் பார்க்க

வீட்டின் ஜன்னல்களை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறையில் எஸ்டேட் பகுதிக்கு இரவு நேரம் கூட்டமாக வந்த யானைகள் தோட்ட அதிகாரியின் வீட்டின் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தின. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்த... மேலும் பார்க்க

கோவையில் விரைவில் தாழ்தள சொகுசுப் பேருந்துகள் இயக்கம்

கோவைக்கு முதல்கட்டமாக 24 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவை இயக்கப்பட உள்ளன. கோவையில் தாழ்தள சொகுசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என நுகா்வோா் அமைப்புகள் சாா்பில் நீண்ட ... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சேவல் விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியைத் தாக்கி கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சூலூா் அருகே பள்ளபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சம்பத்குமாா் ... மேலும் பார்க்க