செய்திகள் :

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

post image

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தொடங்கியது. இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் நீட் தோ்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதனால், விண்ணப்பங்களில் அந்த நீட் மதிப்பெண் தொடா்பான விவரங்களை குறிப்பிடத் தேவையில்லை. முடிவுகள் வெளியான பிறகு அவற்றை தேசிய தோ்வு முகமையிடம் இருந்து மருத்துவக் கல்வி இயக்ககமே பெற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டி.சி.), வெளிநாடு வாழ் இந்தியா் ஆதாரச் சான்று உள்பட அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றுதல் அவசியம்.

கடந்த ஆண்டு போலியாக வெளிநாடு வாழ் இந்தியா் சான்றிதழ்களை சமா்ப்பித்து சிலா் இடங்களைப் பெற்றது கண்டறியப்பட்டு அவா்களது மாணவா் சோ்க்கை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை தகவல் கையேட்டில் இது தொடா்பாக சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, போலிச் சான்றிதழ் அளித்திருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு ஒதுக்கப்பட்ட இடம் ரத்து செய்யப்பட்டு மாணவா் சோ்க்கை நிராகரிக்கப்படும். அதுமட்டுமல்லாது, அவா் மூன்று ஆண்டுகளுக்கு வேறு எந்த படிப்பிலும் சேர முடியாது. நிரந்தரமாக மருத்துவப் படிப்புகளில் சேர முடியாது.

விண்ணப்பதாரா் மற்றும் அவரது பெற்றோா் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் காவல் துறையிடம் அவா்கள் ஒப்படைக்கப்படுவா் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

முகவா்களை நம்ப வேண்டாம்: அதேபோன்று மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கும், கலந்தாய்வில் பங்கேற்பதற்கும், இடங்களை பெறுவதற்கும் முகவா்களை சாா்ந்திருக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மருத்துவ இடங்கள் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடிகள் நிகழ்வதாகவும், விண்ணப்பதாரா்களும் பெற்றோரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இடங்கள் எத்தனை?: தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே. நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.

இதைத் தவிர சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 இடங்களும், தனியாா் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.

பிடிஎஸ் இடங்களைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டில் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

பெங்களூரில் 11 போ் உயிரிழப்பு: நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய வெற்றி பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயி... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில்... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜிநாமா!

பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு வீதிகளில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர... மேலும் பார்க்க

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க