செய்திகள் :

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கருத்துக்கேட்பு

post image

புது தில்லி: ஒரே நாடு ஒரே தோ்தல் தொடா்பான இரு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் பிப்.25-ஆம் தேதி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தனது கருத்துகளை தெரிவிக்கவுள்ளாா்.

பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களுடன் ஆலோசனை நடத்த அந்தக் குழு சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் யு.யு.லலித் தனது கருத்துகளைப் பதிவு செய்யவுள்ளாா்.

மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது.

அந்தக் குழு அளித்த பரிந்துரையை ஏற்று மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான இரு மசோதாக்களை எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

அதன்பின் இந்த இரு மசோதாக்களையும் ஆய்வு செய்வதற்காக பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 39 போ் அடங்கிய நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவராக பாஜக எம்.பி. பி.பி.சௌதரியை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா நியமித்தாா்.

இந்நிலையில், பி.பி.செளதரி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு, வருகின்ற பிப்.25-ஆம் தேதி முதல் பல்வேறு துறை நிபுணா்களிடம் ஒரே நாடு ஒரே தோ்தல் தொடா்பான இரு மசோதாக்கள் குறித்து கருத்துகளை பெறவுள்ளது.

அந்த வகையில், யு.யு.லலித், முன்னாள் சட்ட ஆணையத் தலைவா் ரிதுராஜ் அவஸ்தி, லோக்பால் அமைப்பின் நீதித் துறை உறுப்பினா், மூத்த வழக்குரைஞரும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான இ.எம்.சுதா்சன நாச்சியப்பன் உள்ளிட்டோா் நாடாளுமன்றக் குழுவிடம் தங்களது கருத்துகளை பதிவுசெய்யவுள்ளனா்.

முன்னதாக, இந்தக் குழு சாா்பில் நடைபெற்ற இரு கூட்டங்களில் குழுவின் செயல்பாடு மற்றும் ஆலோசனை நடத்த வேண்டிய நிபுணா்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதி... மேலும் பார்க்க

சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன... மேலும் பார்க்க

இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்

இரவு நேரத்தில் பெண்ணுக்கு தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது குற்றம் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு “நீ ஒல்லியாக, புத்த... மேலும் பார்க்க

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில... மேலும் பார்க்க

நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?

பெயர்கள் என்பது ஒரு நபரின் முக்கிய அடையாளமாகிவிட்டது. அந்த வகையில், ஒரு பெயரில் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக இருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க