செய்திகள் :

ஒரே நாளில் திமுக அமைச்சர், எம்.பி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை... பின்னணி என்ன?

post image

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று, தி.மு.க அமைச்சரின் நண்பர்கள் வீடுகளிலும், தி.மு.க எம்.பி-யின் நிறுவன அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. பணமோசடி வழக்கில் சிறையிலிருந்து ஓராண்டுக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்து மீண்டும் அமைச்சரான செந்தில்பாலாஜியின் நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அமலாக்கத்துறை

மறுபக்கம், சென்னை தியாகராய நகரில் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் அக்கார்ட் டிஸ்டில்லர்ஸ் அண்ட் பிரேவர்ஸ் என்ற மதுபான நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், எஸ்.என்.ஜே குரூப்பின் மதுபான நிறுவன அலுவலகத்திலும் இந்த அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.

அக்கார்ட் டிஸ்டில்லர்ஸ் அண்ட் பிரேவர்ஸ்

அதேபோல், எழும்பூரில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பதாகவும், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஒரே நாளில், தி.மு.க அமைச்சரின் நண்பர்களின் வீடுகள், அந்த அமைச்சர் முன்பு கவனித்து வந்த துறை சார்ந்த அலுவலகம் மற்றும் தி.மு.க எம்.பி-யின் மதுபான நிறுவனத்தின் அலுவலகம் ஆகியவற்றில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது பேசுபொருளாகியிருக்கிறது. இருப்பினும், அமலாக்கத்துறை தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிக்கை வெளியான பிறகு எந்தெந்த காரணங்களின் பின்னணியில் இந்த இடங்களில் சோதனை நடைபெற்றிருக்கிறது என்பது தெரியவரும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Chandrababu Naidu: ``மூன்று மொழிகளையல்ல பல மொழிகளை ஊக்குவிப்பேன்'' - சந்திரபாபு நாயுடு

மும்மொழிக் கொள்கையைத் தமிழக ஆளும் திமுக அரசு, இந்தித் திணிப்பு என்று அரசியலாக்கி தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதாகவும், ஏற்காவிட்டால் கல்விக்கு இரண்டாயிரம் கோடி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என்றும் ... மேலும் பார்க்க

கரூர்: `காலை முதல் இரவு வரை!' - செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற 12 மணி நேர சோதனை

தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில், அமைச்சருக்கு நெருங்கிய நண்பர்களான கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணியின் ராயனூர் வீடு, ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: தனியார் மதுபான ஆலையில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை

தமிழக முழுவதும் அமலாக்கத் துறையினர் மதுபான ஆலை மற்றும் முக்கிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவடடத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் 20 - க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் சிக்கியிருக்க பைடனின் அரசியல் காரணமா... துணை வீரர் சென்னதென்ன?

நீண்ட நாள்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பாததற்கு அரசியலே காரணம் என்ற எலான் மஸ்க்கின் கருத்து சரியானது என்று வழிமொழிந்துள்ளார், விண்வெளி நிலையத்... மேலும் பார்க்க

விருதுநகர்: அதிமுக பொதுக்கூட்டம்; மேடையில் கட்சித் தொண்டரைத் தாக்கிய முன்னாள் அமைச்சர்!

விருதுநகரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் உள்பட அ.தி.ம... மேலும் பார்க்க

`அறிஞர் அண்ணாவிடமிருந்த நேர்மை மு.க.ஸ்டாலினிடம் இல்லை...' - சொல்கிறார் இராம.ஸ்ரீநிவாசன்

புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் தலைமையில் மதுரையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இராம ஸ்ரீநிவாசன், "புதிய கல்விக் கொள்கை மூலமா... மேலும் பார்க்க