செய்திகள் :

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

post image

ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

விதான் பவன் வளாகத்தில் இன்று பத்திரிகையாளர்களுடன் பேசிய துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "ஔரங்கசீப் மகாராஷ்டிரத்தை அழிக்க வந்தவர். நம் நாட்டின் உண்மையான முஸ்லிம் ஒருபோதும் ஔரங்கசீப்பை பெருமையாகப் பேசமாட்டார். ஆனால் எதிர்க்கட்சிகள் அவரை தங்கள் உறவினரைப் போல கருதுகின்றனர். ஔரங்கசீப்பை புகழ்பவர்கள் வெட்கப்பட வேண்டும்.

சத்ரபதி சம்பாஜி மகாராஜை மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தி ஔரங்கசீப் எண்ணற்ற கொடுமைகளைச் செய்தார். ஆனால், சம்பாஜி ஒருபோதும் அதற்கு அடிபணியவில்லை.

இதையும் படிக்க | 24 தலித் மக்கள் கொல்லப்பட்ட வழக்கு: 44 ஆண்டுகளுக்குப் பின் 3 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

அவர் தேசத்துக்காகவும் மதத்துக்காகவும் தனது உயிரைத் தியாகம் செய்தார். எனவே, ஔரங்கசீப்பின் கறை மகாராஷ்டிரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். அதுவே மக்களின் எண்ணம்.

பிரிட்டிஷார் இந்த நாட்டை ஆக்கிரமித்து ஆட்சி செய்தனர். ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அவர்களுடைய ஆட்சியின் அடையாளங்கள் அழிக்கப்பட்டன. அதேபோல், கொடுங்கோல் ஆட்சியாளரான ஔரங்கசீப்பின் கறையும் மகாராஷ்டிரத்தில் இருந்து அழிக்கப்பட வேண்டும்.

ஔரங்கசீப்பை புகழ்வது தேசத்துரோகம். அவ்வாறு செய்பவர்களை மகாராஷ்டிரம் மன்னிக்காது. அவரைப் புகழந்த அபு ஆஸ்மி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சட்டப்பேரவை அமர்வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஔரங்கசீப்பிற்கு ஆதரவாக முன்வரும் எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும், நாக்பூர் தாக்குதல்கள் குறித்துப் பேசிய அவர், “நாக்பூரில் சமூக விரோதிகளின் கோழைத்தனமான தாக்குதலுக்கு எனது கண்டனங்களைததெரிவித்துக் கொள்கிறேன். இரு சமூகங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நாக்பூரில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க காவல்துறையுடன் மக்களும் ஒத்துழைக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய ஒற்றுமை வலுப்படுத்திய மகா கும்பமேளா: நாடாளுமன்றத்தில் பிரதமா் உரை

‘மகா கும்பமேளா, தேசத்தின் ஒற்றுமை உணா்வை வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது. இவ்வளவு பெரிய மக்கள் திரளை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் திறன் குறித்து கேள்வி எழுப்பியவா்களுக்கு பொருத்தமான பதிலாகவும் அமைந்த... மேலும் பார்க்க

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி

திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உயா்கல்வி நிறுவனங்கள் ஏப். 3-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா்... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிற... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் கொலையுண்ட பெண்ணின் பாதி உடல்! மீதியைத் தேடும் காவல்துறை!

ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாள... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: 33 போலீஸார் காயம்! 50 பேர் கைது!

நாக்பூர் வன்முறையில் 33 காவல் துறையினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாக்பூரில் வன்முறை ஏன்?ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் ... மேலும் பார்க்க

இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட... மேலும் பார்க்க