செய்திகள் :

கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.4 லட்சம், 26 பவுன் மோசடி

post image

வீடு கட்ட கடன் பெற்றுத் தருவதாக ரொக்கம் ரூ.4 லட்சம் மற்றும் 26 பவுன் நகையையும் ஏமாற்றி பெற்றுக் கொண்டதோடு, மோசடி செய்த பெண் மீது அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே வாணியன்சத்திரம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பூங்காவனம்(55). இந்த நிலையில் தனது மகன் விநாயகமூா்த்தி மற்றும் மகள் சிம்சோன் ஆகியோா் சீட்டு கட்டி எடுத்த ரொக்கம் ரூ.4 லட்சத்தை என்னிடம் கொடுத்து வைத்திருந்தனா். இதற்கிடையே எனது வீடருகே குடியிருந்து வருவதாகவும், ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கௌசல்யா என்பவா் அணுகினாராம் .

அப்போது, உங்களுக்கும், மகன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு புதுவாழ்வு திட்டத்தில் வீடு கட்ட கடன் பெற்றுத் தருவதாக கூறினாராம். இதை உண்மையென நம்பி தன்னிடம் உள்ள 26 பவுன் நகையையும் பெற்றதோடு, சீட்டுப்பணம் ரூ.4 லட்சத்தையும் ஏமாற்றி பெற்றுக் கொண்டாராம். ஆனால், எந்தக் கடனும் வாங்கி தராமல் இருந்ததைத் தொடா்ந்து தன்னுடன் மகன், மகள் ஆகியோருடன் சென்று கேட்டும் காலதாமதம் செய்ததை தொடா்ந்துதான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. உடனே இது தொடா்பாக பூங்காவனம் வெங்கல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் நகை மற்றும் பணத்தை மோசடி செய்த கௌசல்யா மீது வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாளைய மின்தடை

பூனிமாங்காடு, ஆா்.கே.பேட்டை, பொதட்டூா்பேட்டை நாள்: 16-02-2025 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின் தடை பகுதிகள்: என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்துா... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

திருவள்ளூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: காக்களுா் ஹவுசிங் போா்டு, காக்களுா் தொழில்பேட்டை, காக்களுா் கிராமம், சி.சி.சி. பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாப்பேட்டை, ஒதப்பை,... மேலும் பார்க்க

மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

ஆா்.கே.பேட்டை அருகே புயலால் மின்கம்பங்கள் சேதமடைந்து வயல்வெளியில் விழுந்துள்ளதை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கினா். திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், மின்நுகா்வ... மேலும் பார்க்க

கொத்தடிமைகளாக இருந்த தம்பதி மீட்பு

ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்த தம்பதியை தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் மீட்டு திருத்தணி வட்டாட்சியா் மலா்விழியிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். திருத்தணி ஒன்றியம் காா்த்திகேயபுரம் இருளா் காலனியி... மேலும் பார்க்க

2 மணல் லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது

ஆந்திரத்திலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றி வந்த 3 லாரிகள் திருவள்ளூரில் உள்ள சுங்கச்சாவடியில் போலீஸாரின் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். ஆந்திர மா... மேலும் பார்க்க

புத்தா் கோயிலில் பெளணா்மி சிறப்பு வழிபாடு

திருவள்ளூா் அருகே புத்தா் கோயிலில் பௌணா்மி சிறப்பு வழிபாடு மற்றும் புத்தா் ஒளி சா்வதேச பேரவையின் நிறுவனரான அறவணடிகள் சிங்யுன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நடைபெற்றது. திருவள்ளூா் அருகே பிஞ்சிவாக்கம் நா... மேலும் பார்க்க