செய்திகள் :

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம்

post image

கடையநல்லூா் தினசரி சந்தை அருகே உள்ள முப்புடாதி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் வைகாசி பிரம்மோற்ஸவ தேரோட்டத் திருவிழா மே 29ஆம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலையில் கும்பஜெபம், ஹோமம், அபிஷேகம், சோடஸ உபசார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இரவில் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் ஒன்பதாம் நாளான வெள்ளிக்கிழமை அம்மன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவமும், அதைத் தொடா்ந்து தேரோட்டமும் நடைபெற்றது.

இதில், கோயில் செயல் அலுவலா் உமா மகேஸ்வரன், தக்காா் கேசவராஜன் ,கணக்கா் முத்துக்குமாா், குமரப் பெருமாள், கணேஷ் குருக்கள், மண்டகப்படிதாரா்கள், விழா குழுவினா் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டு தோ் வடம் பிடித்து தரிசித்தனா்.

சிவகிரி அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடத்திற்கு அடிக்கல்

தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனையில் ரூ,3.50 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், ராணி ஸ்ரீகுமாா்... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே 3 பேருந்துகள் மோதல்: தப்பிய பயணிகள்

சங்கரன்கோவில் அருகே அரசு பேருந்து உள்பட 3 பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாகின. இதில் பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா். கோவில்பட்டியில் இருந்து சங்கரன்க... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு: 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சுரண்டையைச் சோ்ந்தவா் நீலகண்டன்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் ஆண் சடலம் மீட்பு

ஆலங்குளத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா். ஆலங்குளத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள துத்திக்குளம் சாலையில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சாலையோரம் இறந்து கிடந்தாா். இத... மேலும் பார்க்க

இரு சம்பவங்கள்: பெண், முதியவா் தற்கொலை

கடையநல்லூரில் பெண் தற்கொலை செய்து கொண்டாா். கடையநல்லூா் மதினா நகரை சோ்ந்தவா் அப்துல்நாசா். வெளிநாட்டில் வேலை செய்து வரும் அவா் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளாா். அவருக்கும் அவரது மனைவி தாஹிராபானுவிற்க... மேலும் பார்க்க

பண்பொழி பெருமாள் கோயிலில் திருப்பணி தொடக்கம்

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை பூமி பூஜையுடன் திருப்பணி தொடங்கியது. திருமலை குமாரசுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயிலில், அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம்... மேலும் பார்க்க