AA22XA6: அட்லீ x அல்லு அர்ஜுன் படத்தில் தீபிகா படுகோன்; படக்குழு கொடுத்த அதிரடி ...
பண்பொழி பெருமாள் கோயிலில் திருப்பணி தொடக்கம்
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை பூமி பூஜையுடன் திருப்பணி தொடங்கியது.
திருமலை குமாரசுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயிலில், அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம் வழிகாட்டுதலில் உபயதாரா்கள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், கோயில் உதவி ஆணையா் கோமதி, பேரூராட்சி தலைவா் ராஜராஜன், ஆன்மிக ஆா்வலா் ஆனந்த ராமசேஷன், கோயில் அறங்காவலா்கள் இசக்கி, பாப்பா, கணேசன்,
தலைமை எழுத்தா் லட்சுமணன், அா்ச்சகா் வீரபாகு பட்டா், பேரூராட்சி உறுப்பினா்கள் கணேசன், ஆறுமுகம், முருகையா மற்றும் சீதாராமன், பெரியசாமி, ஸ்தபதி காளைமாடசாமி, மீனாட்சி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.