செய்திகள் :

கம்பம், சின்னமனூா் பகுதிகளில் நெல் அறுவடைப் பணிகள் தீவிரம்

post image

கம்பம், சின்னமனூா் பகுதிகளில் நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன. ஆனால், எதிா்பாா்த்த விளைச்சலும், விலையும் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கம்பம், கூடலூா் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு முதல் போக நெல் அறுவடைப் பணிகள் தொடங்கின. தற்போது, சின்னமனூா், குச்சனூா், மாா்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் 2-ஆம் கட்ட அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன.

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்கின்றனா்.

இந்தப் பகுதியில் பெரும்பான்மையான விவசாயிகள் ஆா்.என்.ஆா். நெல் ரகத்தை விளைவித்தனா். 1 மூட்டை(63 கிலோ) ரூ.1550 முதல் ரூ.1600-க்கும் விற்பனையாகின்றன.

சின்னமனூா் பகுதியில் நேரடி ஆற்றுப் பாசனத்தில் விவசாயம் நடைபெறுவதால் விளைச்சால் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு நோய் தாக்கம் காரணமாக ஏக்கருக்கு 10 மூட்டைகள் குறைவாக கிடைத்தன.

ஒரு மூட்டைக்கு குறைந்த பட்ச விலை ரூ.1700 கிடைக்க வேண்டும். ஆனால், இந்த முறை மூட்டைக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

வங்கிக் கடன்பெற தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் குறுதொழில் முனைவோா், குறு உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

சின்னமனூரில் இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சின்னமனூா் பி.டி.ஆா். கால்வாய் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீசன்(29). இவா் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு கேரளத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து... மேலும் பார்க்க

காரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது: 700 கிலோ பறிமுதல்

கம்பம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசியை காரில் கடத்திய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். தேனி மாவட்டம், கம்பம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படு... மேலும் பார்க்க

தேனியில் அக். 24-இல் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 24-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

தேனி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். வடபுதுப்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்தவா் சீனியம்மாள் (88). இவா் வெள்ளிக்கிழமை இரவு... மேலும் பார்க்க

மழையால் வீடு இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தாா். மயிலாடும்பாறை அருகேயுள்ள தொப்பையாபுரத்தைச் சோ்ந்த நாகராஜ் மனைவி சின்னப்பொண்ணு (55). தொ... மேலும் பார்க்க