செய்திகள் :

கருவுற்று இருப்பதை அறிவித்த சின்ன திரை நடிகை!

post image

சின்ன திரை நடிகை தர்ஷனா அசோகன் தான் கருவுற்று இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீதானே எந்தன் பொன் வசந்தம் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷனா அசோகன். இவர் தொடர்ந்து கண்ட நாள் முதல் தொடரில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் நாயகியாக நடித்த கனா தொடர் இவருக்கு மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இத்தொடரில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கினார்.

தர்ஷனா அசோகன் - அஷோக்

இதன் பிறகு இத்தொடரில் இருந்து விலகிய தர்ஷனா, அபிஷேக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் திருமணத்திற்காக கனா தொடரில் இருந்து விலகியதாகக் கூறப்பட்டது.

கேரளத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான இவர், அதே துறையைச் சேர்ந்த மருத்துவர் அபிஷேக்கை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், கடந்தாண்டு இவர்களின் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்றது.

இந்த நிலையில், நடிகை தர்ஷனா அசோகன் தாயாகப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், ”எங்களுடைய முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடி வரும் இச்சூழலில் இந்த செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தர்ஷனா அசோகன்.

இது ஒரு அழகான அத்தியாயத்தின் ஆரம்பம். விரைவில் எங்களுடைய அழகான குழந்தையை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தப் புதிய பயணத்தை நாங்கள் தொடங்கவுள்ள நிலையில், உங்கள் பிரார்த்தனைகளில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தர்ஷனா - அபிஷேக் தம்பதியினருக்கு சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பூஜாவின் ஆட்டத்திற்கு போட்டியே இல்லை!

நடிகை பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் தொடர்ந்து இணையத்தைக் கலக்கி வருகிறது. கமர்சியல் திரைப்படங்களில் நடிப்பதற்கான இடம் நடிகைகளுக்கு அபூர்வமாகவே அமைகின்றன. பெரும்பாலும், உடல்மொழியிலோ அல்லது நடனத்திலேயோ ர... மேலும் பார்க்க

என் வாழ்க்கை நோக்கம் இதுதான்: சூர்யா

நடிகர் சூர்யா தன் வாழ்க்கையின் நோக்கம் குறித்து பேசியுள்ளார்.சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாகவும்... மேலும் பார்க்க

குடும்பத்திற்கு கொலை மிரட்டல்கள்: மன்னிப்பு கேட்ட அனுராக் காஷ்யப்!

புலே திரைப்படத்திற்கு ஆதரவாக பேசிய தனக்கும் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ், சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்க... மேலும் பார்க்க

புதுச்சேரி முதல்வர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கும் மின்னஞ்சல் மூலம் மீண்டும் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணைநிலை ஆளுநர் அலுவலகம், தீயணைப்புத்துறை ஆகியவற்றுக்கு வெடிகுண்... மேலும் பார்க்க

ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய எலக்ட்ரிக் கார்..! எவ்வளவு விலை தெரியுமா?

இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் புதிய எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். ஆஸ்கர் நாயகன் ஏஆர்.ரஹ்மான் இசையில் இந்தாண்டு காதலிக்க நேரமில்லை, சாவா படங்கள் வெளியாகி கவனம் பெற்றன. கடந்தாண்டு மனைவியுடனான விவகாரத்தை ... மேலும் பார்க்க

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு சித்திரை மாதம்... மேலும் பார்க்க