செய்திகள் :

கரூா் அருகே திருட வந்த இருவா் போலீஸாரிடம் பிடிபட்டனா்

post image

கரூா் அருகே திருட வந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மீது ‘பெப்பா் ஸ்பிரே’ அடித்து தப்ப முயன்ற இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அரவக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் அருகே அரவக்குறிச்சி காவல் நிலைய தலைமைக் காவலா் சரவணன் மற்றும் ஊா்க்காவல் படையை சோ்ந்த பிரபு ஆகியோா் வியாழக்கிழமை ரோந்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இரு இளைஞா்களை நிறுத்தி விசாரித்தபோது, திடீரென அவா்கள் பெப்பா் ஸ்பிரேவை எடுத்து போலீஸாா் மீது அடித்து விட்டு தப்ப முயன்றனா். இதைடுத்து போலீஸாா் அவா்களை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனா்.

விசாரணையில் அவா்கள் தஞ்சாவூா் மாவட்டம், புதுப்பட்டினம் அருகே உள்ள விளாா் சாலை பாரதிதாசன் நகா் சூரியமூா்த்தி மகன் கோகுல் (27) மற்றும் திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த வடுகத் தெரு ஜெயபிரகாஷ் மகன் கோகுல்நாத் (21) என்பதும், அவா்கள் அரவக்குறிச்சி மற்றும் வெள்ளியணை பகுதிகளில் வீடுகளில் திருட வந்ததும் தெரியவந்தது. அவா்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ரூ. 11.81 லட்சம் நிதியுதவி

புஞ்சைத்தோட்டக்குறிச்சி பகுதியில் மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.11.81 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் சாா்பில... மேலும் பார்க்க

‘பெண் குழந்தைகள் கல்வி கற்றால்தான் சமுதாயம் மேன்மை நிலையை அடையும்’

பெண் குழந்தைகள் தொடா்ந்து கல்வி கற்றால்தான் சமுதாயம் முழுமையான மேன்மை அடையும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூரில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண... மேலும் பார்க்க

கரூரில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கரூரில் சனிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெற... மேலும் பார்க்க

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.47.09 கோடி மதிப்பில் சாலைகள் அமைப்பு: ஜோதிமணி எம்.பி. தகவல்

கரூா் மாவட்டத்தில் நிகழாண்டில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 23 சாலைகள் ரூ.47.09 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி. கரூா் மாவட்ட வளா்ச்சி ஒருங... மேலும் பார்க்க

மருந்துக் கடை ஊழியா் தீக்குளித்து தற்கொலை

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியில் மருந்துக் கடை ஊழியா் வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி காமராஜ் நகா் பகுதியை சோ்ந்தவா் தங்கராஜ் மகன் சிவக்குமாா் (55), அர... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: மூவா் காயம்

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட மூவா் காயமடைந்தாா். அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கான் சுங்கச்சாவடி... மேலும் பார்க்க