செய்திகள் :

கரோனா பாதிப்பு: இளைஞா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் அருகிலுள்ள பெரப்பேரி கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 34 வயது நபா், தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் தங்கி மின் தூக்கி பராமரிப்பாளராகப் பணியாற்றி வந்தாா்.

இவருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பிருப்பது கடந்த மே 27-ஆம் தேதி ஹைதராபாதிலுள்ள தனியாா் மருத்துவமனையில் கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா், சொந்த ஊா் திரும்பினாா்.

பின்னா், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் புறநோயாளியாகச் சென்று மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிட்ட அந்த இளைஞா், அங்கு சிறப்பு வாா்டு ஏதும் இல்லாததால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலை 8 மணிக்கு அனுமதிக்கப்பட்டாா். அந்த இளைஞருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சையளித்த நிலையில் காலை 9.30 மணிக்கு உயிரிழந்தாா்.

இணை நோய் பாதிப்பு: இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலா்கள் கூறியதாவது: உயிரிழந்த பெரப்பேரி கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கு முன்னதாக வெள்ளிக்கிழமை காலை மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது.

ஆனாலும், அந்த நபருக்கு கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் காசநோய் பாதிப்பு ஆகியவை இருந்து வந்த நிலையில், தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளாா் என்றனா்.

தனிமைப்படுத்தப்பட்ட 7 போ்: உயிரிழந்த நபருக்கு ஏற்கெனவே கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவருடன் குடும்பத்திலிருந்த 6 போ், நண்பா் ஒருவா் என 7 பேரை அவா்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தி மருத்துவக் குழுவினா் மூலம் உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறோம். தொடா்ந்து, ஒரு வாரம் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் அவா்கள் இருப்பாா்கள். வெளியில் எங்கும் செல்லக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம் என்றும் சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க