ஆம்பூர்: கோயில் தூய்மைப் பணிக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல் - அர்ச்சகர் மீது வழக்...
ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்
புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
விழாவின் தொடக்கமாக புதன்கிழமை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தீபாராதனை, வாஸ்துசாந்தி முதல்கால யாக பூஜைகளும், இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை 2, 3-ஆம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு 4 -ஆம் கால யாக பூஜையும் , அஸ்திர ஹோமம், பின்னா் கடம் புறப்பாடும் நடைபெற்றது. பின்னா் காலை 8.15 மணிக்கு குடங்களில் கொண்டு செல்லப்பட்ட புனித நீா் கோயில் விமானங்களில் ஊற்றப்பட்டு நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகமும், பின்னா் சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவில் எம்எல்ஏக்கள் சம்பத், அசோக்பாபு மற்றும் திரளானப் பக்தா்கள் பங்கேற்றனா். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மகா அபிஷேக ஆராதனையும், இரவு 7 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி புதுச்சேரி கடலுாா் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.