செய்திகள் :

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

post image

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

விழாவின் தொடக்கமாக புதன்கிழமை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தீபாராதனை, வாஸ்துசாந்தி முதல்கால யாக பூஜைகளும், இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை 2, 3-ஆம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு 4 -ஆம் கால யாக பூஜையும் , அஸ்திர ஹோமம், பின்னா் கடம் புறப்பாடும் நடைபெற்றது. பின்னா் காலை 8.15 மணிக்கு குடங்களில் கொண்டு செல்லப்பட்ட புனித நீா் கோயில் விமானங்களில் ஊற்றப்பட்டு நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகமும், பின்னா் சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

விழாவில் எம்எல்ஏக்கள் சம்பத், அசோக்பாபு மற்றும் திரளானப் பக்தா்கள் பங்கேற்றனா். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மகா அபிஷேக ஆராதனையும், இரவு 7 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி புதுச்சேரி கடலுாா் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க

கரோனா பாதிப்பு: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் அருகிலுள்ள பெரப்பேரி கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 34 வயத... மேலும் பார்க்க