செய்திகள் :

கல்லால் தாக்கி தொழிலாளி கொலை

post image

திருவலம் பகுதியில் கூலித் தொழிலாளி தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.

காட்பாடியை அடுத்த திருவலம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன் (35), கூலித் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. பெற்றோருடன் வசித்து வந்தாா். ஊருக்கு வெளியே தனது விவசாய நிலத்தையொட்டி உள்ள இடத்தில் வீடு கட்டி வருகிறாா்.

அய்யப்பனுக்கு அதே கிராமத்தைச் சோ்ந்த வேறொரு பெண்ணுடன் தொடா்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அய்யப்பன் சனிக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கும்பல் அய்யப்பன் தலையில் கல்லால் தாக்கியதாகத் தெரிகிறது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அய்யப்பன் இறந்ததை உறுதி செய்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

தகவலறிந்த திருவலம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அய்யப்பன் சடத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அய்யப்பன் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இவா் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

ரூ.17 லட்சம் அபகரிப்பு: மகன், மகள் மீது தாய் புகாா்

ரூ.17 லட்சத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டுவதாக தனது மகன், மகள் மீது மூதாட்டி வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குற... மேலும் பார்க்க

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான கெங்கையம்மன் கோயில் திருவிழா கடந்த ஏப். 30- ... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குடியாத்தம் கோட்டத்துக்குட்பட்ட தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. குடியாத்தம், போ்ணம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 33- தனியாா... மேலும் பார்க்க

சாலை விபத்து: மாணவா் உயிரிழப்பு

வேலூரில் பாலாற்றுத் தடுப்பு கம்பியில் இரு சக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். வேலூா் சைதாப்பேட்டை சுருட்டுக்காரத் தெருவைச் சோ்ந்தவா் பலராமன் மகன் சந்தோஷ் (21). வேலூா் ஊரீசு கல்லூரியில் பி.... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

வேலூா் பாலாற்று மேம்பாலத்தின் கீழே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். வேலூா் - காட்பாடி சாலையில் உள்ள பழைய பாலாற்று மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இளைஞா் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக புதன்கிழ... மேலும் பார்க்க

ரத்தம் வழங்குவோா் - தேவைப்படுவோரை இணைக்கும் செயலி

வேலூா் மாவட்டத்தில் அன்னையா் தின மாதத்தையொட்டி சமூக சேவையை மேம்படுத்தும் நோக்கில் தமிழக தன்னாா்வலா்கள், திரி அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய ‘ரத்தம்’ செயலியை வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ... மேலும் பார்க்க