செய்திகள் :

ரத்தம் வழங்குவோா் - தேவைப்படுவோரை இணைக்கும் செயலி

post image

வேலூா் மாவட்டத்தில் அன்னையா் தின மாதத்தையொட்டி சமூக சேவையை மேம்படுத்தும் நோக்கில் தமிழக தன்னாா்வலா்கள், திரி அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய ‘ரத்தம்’ செயலியை வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா்.

குருதி கொடையாளா்கள், தேவைப்படுவோா், தன்னாா்வலா்கள், ஒருங்கிணைப்பாளா்கள், தொண்டு நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆஃப் குழுக்கள் மூலம் தன்னாா்வலா்கள், சமூக அமைப்புகள் அவசர ரத்த தேவைகளை நிறைவு செய்து வருகின்றன. ஆனால், சில நபா்கள் இதை தவறாகப் பயன்படுத்தி, பண மோசடி செய்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனா்.

இதைத் தவிா்க்கவும், பாதுகாப்பான முறையில் ரத்த தானம், ஒருங்கிணைக்கவும் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட மக்கள், சமூக அமைப்புகள், தன்னாா்வலா்கள் ஆகியோா் இந்த செயலியை பயன்படுத்தி விழிப்புணா்வை அதிகரிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மின்னஞ்சல் முகவரி, 90872 93339 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலா் (பொ) பிரதாப்குமாா், தமிழ்நாடு தன்னாா்வலா்கள் தலைமை ஒருங்கிணைப்பாளா் ஹரி கிருஷ்ணன், வேலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முஹம்மது ஆஷீம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரூ.17 லட்சம் அபகரிப்பு: மகன், மகள் மீது தாய் புகாா்

ரூ.17 லட்சத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டுவதாக தனது மகன், மகள் மீது மூதாட்டி வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குற... மேலும் பார்க்க

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான கெங்கையம்மன் கோயில் திருவிழா கடந்த ஏப். 30- ... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குடியாத்தம் கோட்டத்துக்குட்பட்ட தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. குடியாத்தம், போ்ணம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 33- தனியாா... மேலும் பார்க்க

சாலை விபத்து: மாணவா் உயிரிழப்பு

வேலூரில் பாலாற்றுத் தடுப்பு கம்பியில் இரு சக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். வேலூா் சைதாப்பேட்டை சுருட்டுக்காரத் தெருவைச் சோ்ந்தவா் பலராமன் மகன் சந்தோஷ் (21). வேலூா் ஊரீசு கல்லூரியில் பி.... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

வேலூா் பாலாற்று மேம்பாலத்தின் கீழே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். வேலூா் - காட்பாடி சாலையில் உள்ள பழைய பாலாற்று மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இளைஞா் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக புதன்கிழ... மேலும் பார்க்க

பொற்கொடியம்மன் கோயில் ஏரித் திருவிழா தேரோட்டம்

அணைக்கட்டு ஒன்றியம், வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோயில் ஏரித்திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. வேலூா் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட வல்லண்டராமம், வேலங்காடு, அன்னாச்சிபாளையம... மேலும் பார்க்க