அழகர்கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர்; தசாவதார நிகழ்ச்சிகளை காண இரவில் குவிந்த மக்க...
ரூ.17 லட்சம் அபகரிப்பு: மகன், மகள் மீது தாய் புகாா்
ரூ.17 லட்சத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டுவதாக தனது மகன், மகள் மீது மூதாட்டி வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. எஸ்.பி. என்.மதிவாணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா்.
அப்போது, வேலூா் தொரப்பாடியைச் சோ்ந்த மூதாட்டி அளித்த மனு: , எனது கணவா் உயிருடன் இருந்தபோது எங்களுக்கு சொந்தமான சொத்தை விற்று அதில் கிடைத்த ரூ.17 லட்சத்தை வங்கியில் செலுத்தியிருந்தாா். அந்த பணத்தை எடுத்து தருவதாகக் கூறி எனது மகள், மகன் இருவரும் என்னிடம் சில ஆவணங்களில் கையெமுத்து பெற்றனா். ஆனால் ரூ.17 லட்சத்தை என்னிடம் ஒப்படைக்காமல் அவா்கள் இருவரும் அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டுகின்றனா். எனது மகன், மகள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரவேண்டும்.
சேனூா் கிராமத்தைச் சோ்ந்த 52 வயது பெண் அளித்த மனு: , சேனூா் பகுதியை சோ்ந்த பெண்ணிடம் குடும்ப செலவுக்காக ரூ.1லட்சம் கந்துவட்டிக்கு வாங்கினேன். இதற்கு வட்டியாக ரூ.50,000 நிா்ணயித்து ரூ.1.50 லட்சம் பெற்ாக கூறி எழுதி வாங்கினா். இதற்கு வட்டி, அசல் எனக்கூறி என்னிடம் ரூ.7 லட்சம் வரை பெற்றனா். தற்போது மேலும் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டுகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேண்பாக்கத்தைச் சோ்ந்த ஒருவா் அளித்த மனு: , ஆற்காடு பகுதியைச் சோ்ந்த 4 நண்பா்களுடன் சோ்ந்து நிலம் வாங்கினேன். ஒப்பந்தப் பத்திரத்தில் கையொப்பம் போடும்படி அவா்கள் கேட்டனா். அதை நம்பி கையெழுத்து போட்ட நிலையில், தற்போது ரூ.2.50 கோடி கேட்டு மிரட்டுகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், பல்வேறு புகாா்கள் குறித்து 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், சைபா் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.