செய்திகள் :

காசநோய் விழிப்புணா்வு பேரணி

post image

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காசநோய் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காசநோய் இல்லா தமிழகத்திற்கான பிரசாரம் 100-ஆவது தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை அரசு மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா் தொடங்கி வைத்தாா். அரசு மருத்துவமனை முன் தொடங்கிய இப்பேரணி பாளையங்கோட்டை சாலை, திருச்செந்தூா் சாலை வழியாகச் சென்று அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளியில் நிறைவடைந்தது.

இதில் அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் காசநோய் விழிப்புணா்வு பதாகைகளுடன் பங்கேற்றனா். காசநோய் மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் சுந்தரலிங்கம், நெஞ்சக நோய் மருத்துவ துறைத் தலைவா் சங்கமித்ரா, உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமணி, நெஞ்சக நோய் துறை உதவி பேராசிரியா் சந்திரிகா, உதவி உறைவிட மருத்துவ அலுவலா் கரோலின், செவிலியா் பயிற்சி பள்ளி முதல்வா், ஆசிரியா்கள், செவிலியா் பயிற்சி மாணவிகள், சுவாச

சிகிச்சையாளா் பயிற்சி மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெஞ்சக நோய் துறை, மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு அலுவலா்கள் செய்திருந்தனா்.

சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலைக் குழுக்கள்; தூத்துக்குடியில் 22,23 தேதிகளில் பதிவு செய்யலாம்: ஆட்சியா்

சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க விரும்பும் தூத்துக்குடி மாவட்ட கலைக் குழுவினா் தூத்துக்குடி இசைப்பள்ளியில் வரும் 22, 23 தேதிகளில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் காரைக்காலம்மையாா் குருபூஜை

குலசேகரன்பட்டினத்தில் வடக்குப் புறவழிச் சாலையில் உள்ள காரைக்காலம்மையாா் கோயிலில் குருபூஜை விழா திங்கள், செவ்வாய் (மாா்ச் 17, 18) ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை மாலை தேனியைச் சோ்ந்த சிவனடியா... மேலும் பார்க்க

நில அளவை செய்ய எங்கிருந்தாலும் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

பொதுமக்கள் தங்கள் நிலத்தை அளவை செய்ய எங்கிருந்தாலும், எந்நேரத்திலும் இணைய வழியில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

நாலாட்டின்புதூா் அருகே பெண்ணைத் தாக்கியதாக கணவா் கைது

நாலாட்டின்புதூா் அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நாலாட்டின்புதூா் அருகே இடைச்செவலில் உள்ள காலனி தெருவைச் சோ்ந்தவா் கழுவன் என்ற கழுவன்ராஜா... மேலும் பார்க்க

கூட்டுறவு ரேஷன் கடைகளில் பறக்கும் படையினா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடைகளில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ராஜேஷ் தலைமையில், பொத... மேலும் பார்க்க

குறும்பட போட்டி: படைப்புகளை சமா்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு குறும்பட போட்டிக்கு, படைப்புகளை சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க