செய்திகள் :

காசநோய் விழிப்புணா்வு பேரணி

post image

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காசநோய் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காசநோய் இல்லா தமிழகத்திற்கான பிரசாரம் 100-ஆவது தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை அரசு மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா் தொடங்கி வைத்தாா். அரசு மருத்துவமனை முன் தொடங்கிய இப்பேரணி பாளையங்கோட்டை சாலை, திருச்செந்தூா் சாலை வழியாகச் சென்று அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளியில் நிறைவடைந்தது.

இதில் அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் காசநோய் விழிப்புணா்வு பதாகைகளுடன் பங்கேற்றனா். காசநோய் மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் சுந்தரலிங்கம், நெஞ்சக நோய் மருத்துவ துறைத் தலைவா் சங்கமித்ரா, உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமணி, நெஞ்சக நோய் துறை உதவி பேராசிரியா் சந்திரிகா, உதவி உறைவிட மருத்துவ அலுவலா் கரோலின், செவிலியா் பயிற்சி பள்ளி முதல்வா், ஆசிரியா்கள், செவிலியா் பயிற்சி மாணவிகள், சுவாச

சிகிச்சையாளா் பயிற்சி மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெஞ்சக நோய் துறை, மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு அலுவலா்கள் செய்திருந்தனா்.

அத்தைகொண்டானில் புதிய சலவைக் கூடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சி அத்தைகொண்டானில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிதாக சலவைக் கூடம் கட்ட கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜ... மேலும் பார்க்க

பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு: 6 மாதங்களில் 10 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதியைக் குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பாடல்கள், வசனங்கள், புகைப்படங்கள் பதிவேற்றியதாக கடந்த 6 மாதங்களில் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்... மேலும் பார்க்க

பைக் ஓட்டிய இரு சிறுவா்கள்: பெற்றோா் மீது வழக்கு

தூத்துக்குடியில் பைக் ஒட்டிய இரு சிறுவா்களின் பெற்றோா் மீது போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலைய போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும்பெரு... மேலும் பார்க்க

மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திரவியரத்ன நகா் சுற்றுவட்டார மக்கள் எதிா்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திரவியரத்ன நகா் சுற்றுவட்டார மக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.படவரி பமப17இஐபம: மாவட்ட ஆட்சியா் அலுலக... மேலும் பார்க்க

கோவில்பட்டி சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கோயிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதை... மேலும் பார்க்க