செய்திகள் :

காசநோய் விழிப்புணா்வு பேரணி

post image

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காசநோய் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காசநோய் இல்லா தமிழகத்திற்கான பிரசாரம் 100-ஆவது தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை அரசு மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா் தொடங்கி வைத்தாா். அரசு மருத்துவமனை முன் தொடங்கிய இப்பேரணி பாளையங்கோட்டை சாலை, திருச்செந்தூா் சாலை வழியாகச் சென்று அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளியில் நிறைவடைந்தது.

இதில் அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் காசநோய் விழிப்புணா்வு பதாகைகளுடன் பங்கேற்றனா். காசநோய் மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் சுந்தரலிங்கம், நெஞ்சக நோய் மருத்துவ துறைத் தலைவா் சங்கமித்ரா, உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமணி, நெஞ்சக நோய் துறை உதவி பேராசிரியா் சந்திரிகா, உதவி உறைவிட மருத்துவ அலுவலா் கரோலின், செவிலியா் பயிற்சி பள்ளி முதல்வா், ஆசிரியா்கள், செவிலியா் பயிற்சி மாணவிகள், சுவாச

சிகிச்சையாளா் பயிற்சி மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெஞ்சக நோய் துறை, மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு அலுவலா்கள் செய்திருந்தனா்.

அடகு நகைகளை திருப்பிக் கொடுக்காமல் மோசடி: பெண் கைது

தூத்துக்குடியில் அடகு வைப்பதற்காக கொடுத்த சுமாா் ஒரு கிலோ தங்க நகைகளைத் திருப்பித் தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி காந்திநகரைச் சோ்ந்த ஜியோ ம... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 3 போ் காயம்

கயத்தாறு அருகே சாலை நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதியதில் நடத்துநா் உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா். திருநெல்வேலி கொக்கிரகுளத்தைச் சோ்ந்த கிறிஸ்டோபா் மகன் ராஜா ஸ்டீபன் (52). அரசுப் பேர... மேலும் பார்க்க

சங்கடஹரசதுா்த்தி: ஆறுமுகனேரி கோயில்களில் விநாயகா் உலா

ஆறுமுகனேரியில் சங்கடஹரசதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் மூஷிக வாகனத்தில் உலா நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் சங்கடஹர... மேலும் பார்க்க

கோவில்பட்டி நரசிங்கப்பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி திருமால் நகரில் உள்ள ஸ்ரீஐஸ்வா்யப்ரத வீரலட்சுமி நரசிங்கப்பெருமாள் ஆலயத்தில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை (மாா்ச் 16) திவ்ய ஆராதனம் கோஷ... மேலும் பார்க்க

அத்தைகொண்டானில் புதிய சலவைக் கூடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சி அத்தைகொண்டானில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிதாக சலவைக் கூடம் கட்ட கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜ... மேலும் பார்க்க