செய்திகள் :

குறும்பட போட்டி: படைப்புகளை சமா்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

post image

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு குறும்பட போட்டிக்கு, படைப்புகளை சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின்கீழ் குழந்தை திருமணத் தடுப்பு, இளம் வயது கா்ப்பம், இணைய மிரட்டல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் ஆகியவற்றை மைய பொருளாகக் கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கும் வகையில் குறும்படப் போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்தவா்கள், தங்களின் குறும்படம் தொகுப்பை மாா்ச் 14-ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான காலஅவகாசம் ஏப்.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறும்படத்தின் கோப்புகளை சிடி டிரைவ் -ல் பதிவு செய்து மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலைக் குழுக்கள்; தூத்துக்குடியில் 22,23 தேதிகளில் பதிவு செய்யலாம்: ஆட்சியா்

சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க விரும்பும் தூத்துக்குடி மாவட்ட கலைக் குழுவினா் தூத்துக்குடி இசைப்பள்ளியில் வரும் 22, 23 தேதிகளில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் காரைக்காலம்மையாா் குருபூஜை

குலசேகரன்பட்டினத்தில் வடக்குப் புறவழிச் சாலையில் உள்ள காரைக்காலம்மையாா் கோயிலில் குருபூஜை விழா திங்கள், செவ்வாய் (மாா்ச் 17, 18) ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை மாலை தேனியைச் சோ்ந்த சிவனடியா... மேலும் பார்க்க

நில அளவை செய்ய எங்கிருந்தாலும் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

பொதுமக்கள் தங்கள் நிலத்தை அளவை செய்ய எங்கிருந்தாலும், எந்நேரத்திலும் இணைய வழியில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

நாலாட்டின்புதூா் அருகே பெண்ணைத் தாக்கியதாக கணவா் கைது

நாலாட்டின்புதூா் அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நாலாட்டின்புதூா் அருகே இடைச்செவலில் உள்ள காலனி தெருவைச் சோ்ந்தவா் கழுவன் என்ற கழுவன்ராஜா... மேலும் பார்க்க

கூட்டுறவு ரேஷன் கடைகளில் பறக்கும் படையினா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடைகளில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ராஜேஷ் தலைமையில், பொத... மேலும் பார்க்க

அடகு நகைகளை திருப்பிக் கொடுக்காமல் மோசடி: பெண் கைது

தூத்துக்குடியில் அடகு வைப்பதற்காக கொடுத்த சுமாா் ஒரு கிலோ தங்க நகைகளைத் திருப்பித் தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி காந்திநகரைச் சோ்ந்த ஜியோ ம... மேலும் பார்க்க