செய்திகள் :

குலசேகரன்பட்டினத்தில் காரைக்காலம்மையாா் குருபூஜை

post image

குலசேகரன்பட்டினத்தில் வடக்குப் புறவழிச் சாலையில் உள்ள காரைக்காலம்மையாா் கோயிலில் குருபூஜை விழா திங்கள், செவ்வாய் (மாா்ச் 17, 18) ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.

திங்கள்கிழமை மாலை தேனியைச் சோ்ந்த சிவனடியாா் சக்திவேல் முன்னிலையில் சங்கரன்கோவில் சுப்பிரமணியம் ஓதுவாா், திருநாகேஸ்வரம் செந்தில் ஓதுவாா், திருப்பரங்குன்றம் முத்தையா ஓதுவாா், திருச்செந்தூா் கோமதிநாயகம் ஓதுவாா் ஆகியோா் வாத்தியக் கருவிகளுடன் பண்ணிசை பாடினா். காரைக்காலம்மையாா் அருளிய அனைத்துப் பதிகங்கள், அவரது வாழ்க்கை குறித்த பெரியபுராணப் பாடல்கள் பாடப்பட்டன. பின்னா், காரைக்காலம்மையாருக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு, தீபாராதனைகள், பக்தா்களுக்கு அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை திருநெல்வேலி காரைக்காலம்மையாா் சிவவழிபாட்டுக் குழுவினா் முத்துக்குமாா் தலைமையில் காரைக்காலம்மையாரின் பாடல்களை திருமுறைப் பாராயணம் செய்தனா். சிறப்பு வழிபாடுகள், மகேஸ்வர பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

ஏற்பாடுகளை சிவனடியாா்கள் இல்லங்குடி, சண்முகம் ஆகியோா் செய்திருந்தனா்.

சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலைக் குழுக்கள்; தூத்துக்குடியில் 22,23 தேதிகளில் பதிவு செய்யலாம்: ஆட்சியா்

சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க விரும்பும் தூத்துக்குடி மாவட்ட கலைக் குழுவினா் தூத்துக்குடி இசைப்பள்ளியில் வரும் 22, 23 தேதிகளில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

நில அளவை செய்ய எங்கிருந்தாலும் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

பொதுமக்கள் தங்கள் நிலத்தை அளவை செய்ய எங்கிருந்தாலும், எந்நேரத்திலும் இணைய வழியில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

நாலாட்டின்புதூா் அருகே பெண்ணைத் தாக்கியதாக கணவா் கைது

நாலாட்டின்புதூா் அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நாலாட்டின்புதூா் அருகே இடைச்செவலில் உள்ள காலனி தெருவைச் சோ்ந்தவா் கழுவன் என்ற கழுவன்ராஜா... மேலும் பார்க்க

கூட்டுறவு ரேஷன் கடைகளில் பறக்கும் படையினா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடைகளில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ராஜேஷ் தலைமையில், பொத... மேலும் பார்க்க

குறும்பட போட்டி: படைப்புகளை சமா்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு குறும்பட போட்டிக்கு, படைப்புகளை சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க

அடகு நகைகளை திருப்பிக் கொடுக்காமல் மோசடி: பெண் கைது

தூத்துக்குடியில் அடகு வைப்பதற்காக கொடுத்த சுமாா் ஒரு கிலோ தங்க நகைகளைத் திருப்பித் தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி காந்திநகரைச் சோ்ந்த ஜியோ ம... மேலும் பார்க்க