கூட்டுறவு ரேஷன் கடைகளில் பறக்கும் படையினா் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடைகளில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ராஜேஷ் தலைமையில், பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளா், 17 சாா் பதிவாளா்கள், 5 முதுநிலை ஆய்வாளா்கள் உள்ளிட்ட 23 அலுவலா்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படையினா் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூா் வட்டாரங்களில் உள்ள 78 கூட்டுறவுத் துறை நியாயவிலை கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வின்போது, சில நியாயவிலைக் கடைகளில் இருப்பு குறைவு மற்றும் அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தொடா்புடைய நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு இருப்பு குறைவிற்காக ரூ.7,150, கூடுதலாக கண்டறியப்பட்ட பொருள்களுக்காக ரூ.1,675 என மொத்தம் ரூ.8,825 அபராதம் விதிக்கப்பட்டது.