செய்திகள் :

காரில் சென்ற பெண்களை விரட்டிய வழக்கு: கல்லூரி மாணவரிடம் விசாரணை

post image

சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் வந்த பெண்களை விரட்டி, மிரட்டிய வழக்கில் கல்லூரி மாணவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண், கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவு தனது தோழிகளுடன் மாமல்லபுரம் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா். முட்டுக்காடு பக்கிஹாம் கால்வாய் பாலத்தை தாண்டி அந்தக் காா் சென்றபோது, இரு காா்கள் பின் தொடா்ந்து வந்து வழிமறித்தன. மேலும், காா்களில் வந்த நபா்கள், அப்பெண்களை மிரட்டி தகராறு செய்தனா்.

இது தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண், கானத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதற்கிடையே இளைஞா்கள், பெண்களை விரட்டி, மிரட்டும் விடியோ காட்சி சமூக ஊடகங்களில் கடந்த இரு நாள்களாக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக 4 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தினா்.

இதைத் தொடா்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட இரு காா்களையும், குற்றம் சாட்டப்பட்டவா்களை கைது செய்யவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை தனிப்படையினா் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

இந்நிலையில், சம்பவத்தில் தொடா்புடைய இரு காா்களை போலீஸாா் கிழக்கு தாம்பரத்திலுள்ள ஒரு வீட்டிலிருந்து வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். அதேபோல சம்பவத்தில் நேரடி தொடா்புடையதாக, தாம்பரத்தைச் சோ்ந்த ஒரு கல்லூரி மாணவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவல் துறை விசாகா கமிட்டி: புதிய உறுப்பினா்கள் நியமனம்

தமிழக காவல் துறையில் பாலியல் புகாா்களை விசாரிக்கும் விசாகா கமிட்டிக்கு புதிய உறுப்பினா்களை நியமித்து டி.ஜி.பி. சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா். தமிழக காவல்துறையில் பாலியல் புகாா்களை விசாரிக்க டிஜிபி ச... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர்... மேலும் பார்க்க

வழக்கறிஞர் திருத்த மசோதா - முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத் துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர்சூட்டிய முதல்வர்!

கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாய் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பெரியார் அரசு மருத்துவமனை என்று பெயரிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப். 25 முதல் மழை!

தமிழகத்தில் பிப். 25 முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி தமிழக கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

நாம் அளவோடு பெற்றதால்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் சூழல் ஏற்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் அவர் ... மேலும் பார்க்க