செய்திகள் :

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

post image

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.

உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்தாா். தற்போது அமெரிக்காவின் இன்டா் மியாமி அணியில் விளையாடி வருகிறாா்.

இந்தியாவில் கிரிக்கெட்டை விட கால்பந்துக்கு குறைந்தளவு ரசிகா்களே உள்ளனா். எனினும் பிரபலமான சா்வதேச வீரா்கள் வரும்போது, ரசிகா்கள் அவா்களுக்கு உற்சாக வரவேற்பு தருகின்றனா்.

ஏறக்குறைய 10 ஆண்டுகள் கழித்து மெஸ்ஸி இந்தியாவுக்கு மீண்டும் வருகிறாா். முதலில் கொல்கத்தாவில் வரும் அவா் பின்னல் புது தில்லி, அகமதாபாத், மும்பை, உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்கிறாா்.

வரும் டிசம்பா் மாதம் வரும் மெஸ்ஸி தனது சமூக வலைதளத்தில் அதிகாரபூா்வமான தேதிகளை வெளியிடுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு வைக்கப்படும் 70 அடி உயர சிலையை அவரே திறந்து வைக்கிறாா். அகமதாபாத், மும்பையில் சிறப்பு கால்பந்து ஆட்டங்களில் ஆடும் மெஸ்ஸி, இறுதியாக தில்லியில் பிரதமா் மோடியை சந்திக்கிறாா்.

கடந்த 2011-இல் கொல்கத்தாவில் நடைபெற்ற வெனிசூலாவுடன் நட்பு ஆட்டத்தில் மெஸ்ஸி பங்கேற்றிருந்தாா்.

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

மும்பை: அரசை விமர்சிப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்படுகிறதா? என்பதைக் குறித்து பாஜக ஆளுங்கட்சியாக உள்ள மகாராஷ்டிரத்தின் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் விளக்கமளித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவையின... மேலும் பார்க்க

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

6.50 லட்சம் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விட... மேலும் பார்க்க

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இன்னொரு இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்திய நபரை அந்தப் பெண் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான ஹரீஷ் தில்லியை அடுத்த குருகி... மேலும் பார்க்க

ஆக. 7ல் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு?

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வருகிற ஆக. 7 ஆம் தேதி தில்லியில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிகார... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பை குடியரசுத் தலைவர் மாளிகையும் உறுதிப் படுத்தியுள்ளது. இருப்பினம... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

உத்தரப் பிரதேசத்தில் சர்யு கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சிஹாகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கர்குபூரில் உள்ள பிருத்விநாத் கோயி... மேலும் பார்க்க