முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக. 3-இல் ஒரே கட்டமாக ‘நீட்’ தோ்வு: தேசிய மர...
காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், சிந்தாமணி பகுதியில் வியாழக்கிழமை இரவு காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், தொரவி கிராமத்தைச் சோ்ந்த வீரப்பன் மனைவி ராஜகுமாரி (62). இவா், வியாழக்கிழமை இரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிந்தாமணி பகுதியில் தனியாா் பள்ளி அருகே சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத காா் ராஜகுமாரி மீது மோதிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் விரைந்து, ராஜகுமாரியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திச் சென்ற காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.