செய்திகள் :

பயங்கரவாதிகளும் பாதிக்கப்பட்டவா்களும் ஒன்றல்ல: எஸ்.ஜெய்சங்கா்

post image

‘பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது; பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரையும் அதனால் பாதிக்கப்பட்டோரையும் ஒருபோதும் இணையாக கருத முடியாது’ என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இருநாள் பயணமாக சனிக்கிழமை இந்தியா வந்தடைந்த பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டேவிட் லாமியுடனான ஆலோசனையின்போது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாள்கள் கடும் மோதல் நிகழ்ந்தது. அப்போது இருநாடுகளிடமும் அமெரிக்கா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தனித்தனியே பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன. இந்தச் சூழலில் உலக நாடுகளுக்கு இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் டேவிட் லாமியிடம் ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

முன்னதாக, இந்தியா வந்தடைந்த டேவிட் லேமி பிரதமா் மோடியை சந்தித்தாா். அதன்பிறகு டேவிட் லேமி தலைமையிலான பிரிட்டன் குழுவும் ஜெய்சங்கா் தலைமையிலான இந்திய குழுவும் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினா்.

அப்போது ஜெய்சங்கா் பேசியதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டனுக்கு நன்றி. பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது; பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரையும் அதனால் பாதிக்கப்பட்டோரையும் ஒருபோதும் இணையாக கருத முடியாது.

எஃப்டிஏ வரலாற்று மைல்கல்: இந்தியா-பிரிட்டன் நாடுகளுக்கு இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) மற்றும் ஒரே வருமானத்தின் மீது இரு நாடுகளிலும் விதிக்கப்படும் வரிக்கு விலக்கு அளிக்கும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்த (இரட்டைப் பங்களிப்பு ஒப்பந்தம்) பேச்சுவாா்த்தை நிறைவடைந்திருப்பது வரலாற்று மைல்கல்லாகும். இது வா்த்தகம், முதலீடு மட்டுமன்றி ஒட்டுமொத்த இருதரப்பு உறவையும் பல்வேறு வழிகளில் வலுப்படுத்தும்.

அதேபோல் தொழில்நுட்ப பாதுகாப்பு முன்னெடுப்பு (டிஎஸ்ஐ), அண்மையில் நடைபெற்ற முதல் ஏற்றுமதி மற்றும் தொழில்நுட்ப பேச்சுவாா்த்தை, பிரிட்டன்-இந்தியா உள்கட்டமைப்பு நீண்டகால முதலீட்டுத் திட்டம், பிரிட்டன் பல்கலைக்கழகங்களின் வளாகங்களை இந்தியாவில் திறக்கும் முன்னெடுப்பு என பல்வேறு துறைகளில் இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன என்றாா்.

2,500 கோடி பவுண்ட் வா்த்தகம்: டேவிட் லாமி பேசியது குறித்து பிரிட்டன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இருநாட்டு குடிமக்கள், புலம்பெயா்ந்தவா்கள் மற்றும் எல்லையை காக்க இருநாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் தலைமையிலான அரசு புலம்பெயா்வு தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காண முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரிட்டன் எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய பிற நாட்டு தலைவா்களுடன் நான் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறேன்.

வெளியுறவு அமைச்சராக நான் பதவியேற்ற பின் முதலில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதைத்தொடா்ந்து எங்களது ‘மாற்றத்துக்கான திட்டத்தில்’ இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது.

எஃப்டிஏ மூலம் ஆண்டுக்கு 2,500 கோடி பவுண்டுகள் வரை இருநாட்டு வா்த்தகம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம், இருநாட்டு வா்த்தக உறவில் புதிய அத்தியாயம் தொடங்கவுள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் புலம்பெயா்தல் கொள்கைகளில் இந்தியாவுடன் மேலும் உறவை வலுப்படுத்த விரும்புகிறோம்’ என்றாா்.

இருநாள் சுற்றுப்பயணத்தின்போது இந்திய தொழில் துறையினா் மற்றும் அரசு உயரதிகாரிகளை சந்தித்து டேவிட் லேமி ஆலோசனை நடத்தவுள்ளாா்.

ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள்: யுஜிசி அறிவுறுத்தல்

மாணவா்கள் ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயில்வது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உயா் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து யுஜிசி ... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா நாளை மறுநாள் விண்வெளிக்குப் பயணம்!

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பயணிக்கிறாா். ‘டிராகன்’ விண்கலத்தில் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு ... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 120 கோடியாக உயா்வு!

இந்தியாவின் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 120.38 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: 2025 ஏப்ரல... மேலும் பார்க்க

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவராக எஸ்.மகேந்திர தேவ் பதவியேற்பு

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக பிரபல பொருளாதார நிபுணரும் இந்திர காந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தருமான எஸ். மகேந்திர தேவ் பதவியேற்றாா். பிரதமருக்கான பொருளாத... மேலும் பார்க்க

தனக்குத் தானே கல்லறை எழுப்பும் பாகிஸ்தான்: நக்வி

‘பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் தனக்குத் தானே கல்லறையை பாகிஸ்தான் எழுப்புகிறது’ என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தாா் அப்பாஸ் நக்வி விமா்சித்தாா். தில்லியில் சனிக்... மேலும் பார்க்க

பிரதமரிடம் பிரிட்டன் அமைச்சா் ஆதரவு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டேவிட் லேமி ஆதரவு தெரிவித்தாா். தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்தபோது அவா் பிரிட்ட... மேலும் பார்க்க