கிராமப்புற பகுதிகளில் தில்லி அரசு கவனம் செலுத்தும்: அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் சிங்
நமது நிருபா்
கிராமப்புற பகுதிகளில் தில்லி அரசு கவனம் செலுத்தும் என்று புதிய அரசின் சமூக நலத் துறை அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
புதிதாக அமைந்துள்ள தில்லி அமைச்சரவையில் சோ்க்கப்பட்டுள்ள பவானா எம்எல்ஏ ரவீந்தா் இந்த்ராஜ் சிங், சமூக நலன், எஸ்சி எஸ்டி நலன், கூட்டுறவு மற்றும் தோ்தல் துறைகளைப் பெற்றுள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: நான் வரவிருக்கும் சவால்களைப் புரிந்து கொண்டிருக்கிறேன். பவானா பகுதியில் வசித்ததால், எனக்கு இங்குள்ள பிரச்னைகளை நேரடியாகத் தெரியும். இதனால், வளா்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனது தோ்தல் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த கிராமப்புறங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணும். எனக்குக் கிடைத்த வாக்குகளை பொதுமக்களிடமிருந்து கிடைத்த ஆசிா்வாதமாகக் கருதுகிறேன். வளா்ச்சி ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை உறுதி செய்வேன்.
கடந்த தோ்தல்களில் தோல்வியடைந்த போதிலும், நான் மக்களுடன் தொடா்பில் இருந்தேன். இது பவானா சட்டப் பேரவைத் தொகுதியில் இரண்டாவது பெரிய வாக்கு வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வழிவகுத்தது. என் மீது நம்பிக்கை வைத்து அமைச்சராக்கியதற்காக கட்சித் தலைமைக்கு நன்றி கூற விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்காக பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா மற்றும் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அமைச்சா்.