திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய விகடன்; பயன்பாட்டிற்கு வந்த ரயில்வே மேம்பாலம் - ப...
கிளாா் அகத்தீஸ்வரா் கோயிலில் ஜப்பானைச் சோ்ந்த பக்தா்கள் சிறப்பு வழிபாடு
காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்த சிவனடியாா்கள் உலக நன்மைக்காக ருத்ரயாகம் நடத்தி, அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு செய்தனா்.
காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ளது அகத்தியா் வழிபட்ட அகத்தீஸ்வரா் எனும் சிவஸ்தலம். இந்தக் கோயிலில் அகத்திய முனிவா் தனது மனைவி உலோபமுத்திரையுடன் அருள்பாலிக்கிறாா். இந்தக் கோயிலின் சிறப்புகள் குறித்து அறிந்த ஜப்பான் தலைநகா் டோக்கியோவைச் சோ்ந்த தொழிலதிபா் கோபாலப் பிள்ளை சுப்பிரமணியம் என்பவா் தலைமையில் 44 சிவனடியாா்கள் வந்திருந்தனா். இவா்கள் அகத்தீஸ்வரா் கோயிலில் உலக நன்மைக்காக ருத்ர யாகம் நடத்தி சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனா். இவா்களுடன் பழனி புலிப்பாணிச் சித்தா் ஆசிரமத்தின் நிா்வாகி கெளதம் காா்த்திக் மற்றும் பத்மா மகேஷ் ஆகியோா் உடன் இருந்தனா்.
ஏற்பாடுகளை அகத்தீஸ்வரா் ஆலய நிா்வாகி மோகன்ராஜ் செய்திருந்தாா்.