செய்திகள் :

குற்றவாளிகள் பெரிய ஆள்கள் என்பதால்.. சுஷாந்த் ராஜ்புத் வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

post image

மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்களிடம் காட்டம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் மிகப்பெரிய ஆள்கள் என்பதால்தானே என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில், நடிகை ரியா சக்ரபர்தி மற்றும் அவரது குடும்பத்தினரை தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்த சிபிஐ நடவடிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முறையிட்டிருக்கும் சிபிஐ, மகாராஷ்டிர மாநில குடிமைப்பணிகள் துறை ஆகியவற்றை குற்றம்சாட்டியிருக்கிறது. குற்றவாளிகள் மிகப்பெரிய பின்னணி கொண்டவர்கள் என்பதால்தானே முறையீடு செய்யப்பட்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களை அற்பமான மனுக்கள் என்றும் நீதிபதிகள் அமர்வு கருத்துக் கூறியிருக்கிறது. நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர், மிகப்பெரிய பின்னணி கொண்டவர் என்பதாலேயே நீங்கள் இப்படி ஒரு அற்பமான மனுவை தாக்கல் செய்திருக்கிறீர்கள். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இரண்டு பேருமே சமூகத்தில் மிகப்பெரிய பின்னணியைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து, அவரது பெண் தோழி ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரை தேடப்படுவோர் என்று சிபிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகையும், அவரது குடும்பத்தினரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் கூறியிருந்தது.

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு ரியா சக்ரவர்த்தியும் அவரது குடும்பத்தினரும் பண மோசடி வழக்கில் விசாரிக்கப்பட்டனர். அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணையில், ரியாவின் வருவாய், முதலீடுகள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக சுஷாந்த் வங்கிக் கணக்கிலிருந்து ரியா ரூ.15 கோடியை பரிமாற்றம் செய்ததே, நடிகரின் மரணத்துக்குக் காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் - பாஜக மோதலில் பாஜக தொண்டர் பலி!

அஸ்ஸாமில் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையிலான மோதலில் பாஜக தொண்டர் பலியானார்.அஸ்ஸாமில் சமாகுரி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக, வியாழக்கிழமையில் (அக். 24) காங்கிரஸ் வேட்பாளர் தன்சில்... மேலும் பார்க்க

மும்பையில் ரூ. 138 கோடி நகைகள் பறிமுதல்! போலீஸார் விசாரணை!

மகாராஷ்டிரத்தில் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், ரூ. 138 கோடியிலான தங்க நகைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.மகாராஷ்டிரத்தில் நவம்பர் மாதத்தில் சட்ட... மேலும் பார்க்க

சுற்றுலா சென்ற புதுமணப் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலா புதுமணத் தம்பதியரைத் தாக்கி, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில், புதிதாய் திருமணமான தம்ப... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் அப்போதாபாத்தில் புதிய பயங்கரவாத தொழிற்சாலை; தகவல்கள்

புது தில்லி: பாகிஸ்தானின் அப்போதாபாத்தில், மத்திய அரசால் பயங்கரவாத அமைப்புகள் என தடை செய்யப்பட்டிருக்கும் லஸ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல்முஜாகிதீன், ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய அமைப்புகள் கூட்டாக பயங்கரவாத முகாமை ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் டானா புயலுக்கு ஒருவர் பலி!

மேற்கு வங்கத்தில் டானா புயலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்தார் வங்கக்கடலில் உருவான டானா புயல் அக்.24 நள்ளிரவில் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையைக் கடந்தது. ... மேலும் பார்க்க

வளர்ப்பு நாய் டிட்டோவுக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா!

மறைந்த டாடா குழுமத்தின் கௌரவத் தலைவர் தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய் டிட்டோவுக்கு உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.மிகப்பெரும் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா மும்பையில் ... மேலும் பார்க்க