செய்திகள் :

கேதர்நாத் யாத்திரை: ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்குத் தடை விதிக்க பாஜக கோரிக்கை!

post image

கேதர்நாத் யாத்திரை செல்பவர்களில் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு தடை விதிக்க பாஜக கோரிக்கை வைத்துள்ளது.

கேதார்நாத் யாத்திரை தொடர்பான மேலாண்மை கூட்டம் இன்று நடைபெற்றது. கேதர்நாத் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ ஆஷா நௌதியல் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் கவனிக்கப்படாத சில பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கேதர்நாத் கோவில் குறித்து மக்கள் எழுப்பிய பிரச்சினைகளுடன் உடன்படுவதாகத் தெரிவித்த நௌதியல், கேதார்நாத் கோவிலுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சிலர் நடந்துகொள்வதாகவும், அவர்கள் கேதர்நாத் வளாகத்திற்குள் நுழையத் தடை விதிக்கக் கோரிக்கை வைக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், இவ்வாறு செய்பவர்கள் கோவிலில் அவதூறான காரியங்களை செய்ய வரும் ’இந்துக்கள் அல்லாதவர்கள்’ என்று நௌதியல் குற்றச்சாட்டு வைத்தார்.

இதையும் படிக்க | பல்கலை வளாகத்தில் தொழுகை நடத்திய மாணவர்கள்: நிர்வாகம் மீது காவல்துறை வழக்குப்பதிவு!

முன்னதாக, உத்தரகாண்ட் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக கேதர்நாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப்பில் உள்ள இரண்டு ரோப்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது தொடர்பாகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தத் திட்டங்கள் நிறைவடைந்தவுடன், இரண்டு புனித யாத்திரைத் தலங்களுக்கும் வருபவர்களுக்கு விரைவான, சிறப்பான அனுபவம் கிடைக்கும்.

அதில், கேதார்நாத்தில் உள்ள சோன்பிரயாக் 12.9 கிமீ ரோப்வே திட்டமாகும். இது வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, இயக்குதல் மற்றும் பரிமாற்றம் முறையில் உருவாக்கப்படவுள்ளது. இதன் மொத்தச் செலவு ரூ.4,081.28 கோடி.

இந்த ரோப்வே பொது-தனியார் கூட்டாண்மையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஒரு மணி நேரத்திற்கு ஒரு திசையில் 1,800 பயணிகளையும், ஒரு நாளைக்கு 18,000 பயணிகளையும் ஏற்றிச் செல்ல முடியும்

பெற்றோா் வற்புறுத்தலால் கலைப் பிரிவு எடுத்த மாணவிக்கு அறிவியல் பிரிவில் சோ்க்கை! -இன்ப அதிா்ச்சி கொடுத்த மத்திய கல்வி அமைச்சா்

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி குஷ்புக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் அழைத்துப் பேசி இன்ப அதிா்ச்சி அளித்துள்ளாா். இந்த மாணவயின் சகோதரா்களை... மேலும் பார்க்க

இந்தியா-மலேசியா இணைந்து நடத்தும் பிராந்திய பயங்கரவாத எதிா்ப்பு மாநாடு!

ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மற்றும் அதன் 8 பாா்வையாளா் உறுப்பு நாடுகளின் கீழ் இயங்கும் பயங்கரவாத எதிா்ப்புக்கான நிபுணா் பணிக் குழுவின் (இடபிள்யுஜி) இரண்டு நாள் மாநாடு தில்லியில் ப... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதிக்கு வெள்ளையடிக்கும் பணி: தொல்லியல் துறை மேற்பாா்வையில் தொடக்கம்!

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியின் வெளிப்புற சுவா்களின் வெள்ளையடிக்கும் பணி, உயா்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறையின் மேற்பாா்வையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியத... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறையை இடிப்பதால் எந்தப் பயனும் இல்லை! -மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே கருத்து

‘மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய பேரரசா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது’ என்று மத்திய இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளாா். சத்ரபதி ச... மேலும் பார்க்க

மோசடி கடவுச்சீட்டில் இந்தியாவினுள் நுழைந்தால் 7 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம்!

மோசடி கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அல்லது நுழைவு இசைவு (விசா) மூலமாக இந்தியாவினுள் நுழையும் வெளிநாட்டினருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: மாதா வைஷ்ணவி தேவி கோயில் நன்கொடை 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டில் (ஜனவரி வரை) ரூ.171.90 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாகக் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2020-21-ஆம் நி... மேலும் பார்க்க