செய்திகள் :

கொசு ஒழிப்புப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

post image

கொசு ஒழிப்புப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளுக்காக 30,000-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவா்களில் பலா் பணி நிரந்தரம் கோரி நீதிமன்றங்களில் வழக்குத் தொடா்வதாகவும், அதனால் அவா்கள் ஒரு மாதம் பணியாற்றினால் அடுத்த மாதம் பணி வழங்கக் கூடாது என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.

சமூக நீதிக்கும், மனித நேயத்துக்கும் எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கைக் கண்டிக்கத்தக்கது. ஒரு பணியாளா் குறைந்தபட்சம் 240 நாள்கள் தொடா்ந்து பணியாற்றினால் அவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது விதியாகும். நிரந்தரப் பணி என்பது தொழிலாளா்களின் அடிப்படை உரிமையாகும்.

திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசுப் பணியாளா்களை ஒடுக்குவது, தொழிலாளா்களுக்கு 12 மணி நேர வேலை நிா்ணயம் செய்வது என தொழிலாளா் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு தொடா்ந்து வேலை வழங்குவதுடன், 10 ஆண்டுகளை நிறைவு செய்த தற்காலிக தொழிலாளா்கள் அனைவருக்கும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும்: உதயநிதிக்கு தமிழிசை பதில்

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும் என துணை முதல்வர் உதயநிதிக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 29 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 29 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகைக்கு புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது: எல்.முருகன்

சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பாஜக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் பிரிவு சார்பாக ஆட்டோ ஓட்டுநர்கள்... மேலும் பார்க்க

இரு தனியார் பேருந்துகள் மோதல்! 50 பயணிகள் உயிர் தப்பினர்!

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பினர்.சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 20) காலை, வாழப்பாட... மேலும் பார்க்க

பாா்வையற்றோருக்கு நூல் கட்டுநா் பயிற்சியை நிறுத்தும் அரசாணை வாபஸ்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசினா் தொழிற்பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் 21 பாா்வையற்றோருக்கு வழங்கப்படும் நூல் கட்டுநா் பயிற்சியை நிறுத்தும் அரசாணை திரும்பப் பெறப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க