செய்திகள் :

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

post image

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக சயானிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கொாடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ், ஜம்ஷீா் அலி, மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய் உள்ளிட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்குத் தொடா்பாக ஜெயலலிதாவின் முன்னாள் வளா்ப்பு மகன் சுதாகரன், முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் வீரபெருமாள், பெருமாள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவா்களுக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனா்.

இதனிடையே, இந்த வழக்கில் கைதான கேரளத்தைச் சோ்ந்த சயானிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாா் முடிவு செய்து, கடந்த 17 ஆம் தேதி நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பியிருந்தனா். ஆனால், சில காரணங்களால் அன்றைய தினம் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என சயான் தரப்பில் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து வரும் வியாழக்கிழமை கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சயானுக்கு சிபிசிஐடி போலீஸாா் மீண்டும் அழைப்பாணை அனுப்பினா்.

இந்த நிலையில், சிபிசிஐடி போலீஸாாின் அழைப்பாணையை ஏற்று, சயான் வியாழக்கிழமை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். சயானிடம் அறியப்படாத இரண்டாவது செல்போன் தொடர்பாக விசாரணையானது நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் இந்த வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சிகள்!

ஓடிடியில் வெளியானது வீர தீர சூரன் - 2!

விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் - 2 படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஒ... மேலும் பார்க்க

என்எல்சி தொமுச-வை தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடைபெற இருக்கின்ற ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை எண்.6-இல் வாக்களித்துத் தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும் என திமுக தலைவரும் முதல்வருமான ம... மேலும் பார்க்க

தஞ்சை அரசு மருத்துவமனை மகப்பேறு பச்சிளம் குழந்தை பிரிவில் தீ விபத்து!

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் மகப்பேறு பச்சிளம் குழந்தை பிரிவில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்த பிரிவில் இருந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் உடனடியாக வெளி... மேலும் பார்க்க

ஐ.நா. சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும்: மதுரை ஆதீனம் விடியோ

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஐ.நா. பொது சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் என மதுரை ஆதீனம் விடியோ வெளியிட்டுள்ளார்.மதுரை தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள ஆதீனம் மடத்திலிருந்து மதுரை ஆதீனம்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சிகள்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசாா்ட் ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

விசாகப்பட்டினம்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ... மேலும் பார்க்க